ஓ இளைஞனே !கவிஞர் இரா.இரவி

ஓ இளைஞனே !கவிஞர் இரா.இரவி

விடியவில்லை என்றவனே
விடிந்தும் நீ எழவில்லை
விழித்துப்பார் இளைஞனே
விடிந்தது விளங்கும்
கடிகார முள்ளைப்பார்
களைப்பின்றி ஓடுவதைப் பார்
சோம்பேறித் தனத்தை விடுத்து
ஓய்வின்றி உழைக்கப்பார்
எதிர் காலத்திற்குச் சேமிக்கும்
எறும்பின் சுறுசுறுப்பைப்பார்
மலர்களில் தேனை
எடுத்துச் சேமிக்கும் தேனீயைப்பார்
சுறுசுறுப்பாக மாறிப்பார்


கருத்துகள்