ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி



சிற்பி வீட்டு
படிக்கல்லானாலும்
சிலையாவதில்லை

ஆட்சியில் ஆள்பவர்களை விட
மனதை ஆண்டவர்கள்
மரித்த பின்னும் வாழ்கின்றனர்

கோடிகள் கொள்ளை
அடித்தாலும் முடிவு
தற்கொலை கொலை

பொம்மை உடைந்த போது
மனசும் உடைந்தது
குழந்தைக்கு

தடியால் அடித்து
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான்

அனைவரும் விரும்புவது
அதிகாரம் அல்ல
அன்பு

நிலம் விற்றுப்
பெற்றப் பணத்தில்
அப்பாவின் முகம்

கால்களைத் தொட்டு
வணங்கிச் சென்றன
அலைகள்

சிற்பி இல்லை
சிற்பம் உண்டு
நிலையானது எது ?

போட்டியில் வென்றது
புற அழகை
அக அழகு

நான் கடவுள் என்பவன்
மனிதன் அல்ல
விலங்கு

அவளுக்கும் உண்டு
மனசு மதித்திடு
மனைவி

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்