ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்

கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்...

மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்...

உயிரற்ற பொருளையும்
தாக்கியது வைரஸ்
கணினி

ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்
விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

முகம் பார்க்க வேண்டும்
என்னவளே உன்
முகத்தைக் காட்டு....

மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ

வண்ணம் மாற வில்லை
மழையில் நனைந்தும்
வண்ணத்துப்பூச்சி

வண்ணம் மாறியது
கட்சி தாவியது
அந்தி வானம்

கோடை மழை
குதூகலப் பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்.

சாலையில் கவனம்
வழியில் மரணக்குழி
செய்தியாகி விடுவாய்

சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்

புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

ஏக்கத்தில் குழந்தை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்.

ஆயத்தம்
டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி

பிறரின் உழைப்பில்
பிரகாசிக்கும்
சோம்பேறி
முதலாளி


பறிக்க மனமில்லை
அழகாய் மலர்ந்தும்
விதைத்தது அவள்

பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்