வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி


வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி

சுண்டைக்காய் இலங்கை ராணுவத்தான் கண்ணில்
சுண்டு விரலை விட்டு ஆட்டுகின்றான்

தமிழ்நாட்டு மீனவர்களைச் சுடுகின்றான்
மீன் வலைகளை அறுத்து எரிகின்றான்

நிர்வாணப் படுத்தி அவமதிக்கின்றான்
கருவிகளைக் களவாடிச் செல்கின்றான்

மீனவர்களைக் கடத்திச் செல்கின்றான்
இலங்கைச் சிறையில் வதைக்கின்றான்

கடல் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின்
கைகளில் இருப்பது துப்பாக்கியா ?பூச்சென்டா

பாகிஸ்தானிடம் வீரம் காட்டும் இந்தியா
பக்கத்துஇலங்கையிடம் வீரம் காட்டாதது ஏன்?

தமிழருக்காக என்றாவது இந்திய ராணுவம்
தட்டிக் கேட்டதுண்டா ?இலங்கை ராணுவத்தை

ஏன்?என்று கேட்க நாதி இல்லை
இந்தியனாகத் தெரியவில்லை தமிழன்

தமிழனின் உயிரை மதிக்காத இந்தியாவை
தமிழன் மதிக்க மனம் வருமா ?

விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களைவிட
விவேகமானது தமிழ் மக்களின் உயிர் காப்பது



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்

  1. பிழைப்புக்காக புறப்பட்டோம் பிடித்தோம் ஒரு தீவை
    உழைப்பை கொடுத்தோம் உருவானது இலங்கை
    உரிமையை பெற்றதோ கருனகக்குட்டம் சிங்களம்
    உரிமைக்காக உயிர்ப்பலி கொடுத்ததோ ஏராளம்
    எங்கள் உரிமைக்காக போராடியவர்களுக்கு புகலிடம் தந்த
    அன்னைத்தமிலகத்தின் அருமைப்பிரதமரின் மரணத்திற்கு
    எங்கள் மறவர்கள் காரணமானதால், தவறு செய்த தனயனை
    கொன்றான் என்பதற்காக தம்பியை எந்நாளும் தமிழுலகம்
    மன்னிக்க கோரியபோது "மறப்போம் மன்னிப்போம்"
    என்று ஏற்றுக்கொண்ட தமிழினமே இன்று நாதியற்ற
    எங்களுக்காக ஒற்றுமையை ஓரணிப்புயலாய் போராடாமல்
    அரசியல் அரவாநிகளால் நாளுக்கொரு குப்பைகுலங்கலாக
    குக்குரல் போட்டு கோமாளித்தனமான போராட்டங்களை
    செய்வதால் எங்களுக்கென்ன நன்மை?
    ஆஸ்திரேலியாவில் ஐந்து மாணவர்கள் அசிங்கப்பட்டதர்க்காக
    பாராளுமன்றமே கண்டன குரல்களால் வெடித்து மாணவர்களின்
    மானம் காக்கப்பட்டதே லட்சக்கணக்கான உயிர்களை இழந்த
    எங்களுக்காக உலக நாடுகளே உரிமைக்குரல் கொடுக்கும் பொது, உன் இனத்துக்காக உன் தேசத்தை உன்னால்
    பணியவைக்காம்டியாவிட்டால் நீ உயிரோடு இருந்தாலும்
    ஒன்றுதான், உயிரோடு இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
    உழைப்பது நானாயினும் உயர்வது -எந்தன்
    சமுதாயமாக இருக்கட்டும்.மாச்சம்பாலயம் மாரியப்பன்.
    எனது வலைத்தளங்கள்
    kingmakermariappan.blogspot.com
    mkmthalanmy.blogspot.com
    vizhiththeluvom.blogspot.com
    manabaranam.blogspot.com

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக