அணு ஆய்வாளர் திரு நீரஜ் ஜெயின் உரைதொகுப்பு கவிஞர் இரா .இரவி

அணு ஆய்வாளர்  திரு நீரஜ் ஜெயின் உரை

ஏற்பாடு  மக்கள் கண் காணிப்பகம் மதுரை

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

அணு உலையை ஆதரிப்பவர்களை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்  .
அணு உலை விபத்து ஏற்படாவிட்டாலும் செயல்படும் எல்லாக் காலங்களிலும்
கதிரயக்கம் வெளிப்படுகின்றது
காற்றோடு கலக்கின்றது ,நீரோடு கலக்கின்றது.
ஒரு அணு உலையின் ஆயுட்காலம் சுமார் 50ஆண்டுகள் என்றால் அணு உலை
மூடிய பின்னும் 1000ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்கும்  .
வருங்கால சந்ததிகள் உடல் குறைபாடுடன் பிறக்கும் .
அமெரிக்கா நடத்திய  ஆய்வில் யுரேனியம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில்
வேலை பார்ப்பவர்களுக்கு நுரை ஈரல் புற்று நோய் வருகின்றது .
தாதுப் பொருள்கள் வெட்டி எடுக்கும் சுற்றுப் பகுதி கிராம மக்களுக்கு
புற்று நோய் வருகின்றது.
அணு உலை சுழற்சி நடுக்கும் போது சின்ன விபத்து பெரிய விபத்து என நடந்து
கொண்டே இருக்கின்றது.
1000 ஆண்டுகள் பின் விளைவு உள்ளது அணு உலை கழிவுகளில்
உலகில் உள்ள அணு உலைகளில் இந்தியாவில் உள்ள அணு உலைகள் ஆபத்தானவை .
சுனாமி வருவதிற்கு முன்பே வடிவமைத்த கூடங்குளம் அணு உலை சுனாமி தாங்கும் வண்ணம் வடிவமைக்க வில்லை .
சுனாமி தாங்கும் அணு உலை கண்டுபிடிக்கப் பட வில்லை .

அணு ஆய்வாளர் திரு கடேக்கர் PHD ஆய்வுக் கருத்து
குழந்தைகள் இறந்து பிறக்கக் காரணம் அணு உலை கதிர் வீச்சு
பலருக்கு புற்று நோய் வந்துள்ளது .
முன்னி என்ற குழந்தை தரையில் உட்கார முடியாது தொட்டிலில் படுக்க  வைத்தே
 இருக்கும் .
தினேஷ் என்ற சிறுவன் நேராக நிற்கவே முடியாது .
சில குழந்தைகளுக்கு கையில் விரல்களே இல்லை . .
மின்சாரத்திற்காக அணு உலை வேண்டும் என்று சொல்பவர்கள் அணு கதிர் வீச்சால்
பாதிக்கப் பட்ட குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கத் தயாரா ?

அணு உலை அருகில் உள்ள கடலில் இருந்து நொடிக்கு லட்சக் கணக்கான லிட்டர்
தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் .அணு உலையில் கலந்து வெந்நீராகி
கடலில் திரும்ப  கலக்கும்   போது மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்கள்
இறந்து விடுகின்றன .மீனவர்களின் மீன் பிடிக்கும்    தொழில் முடங்கும் .

அமெரிக்காவின்  அணு உலை உள்ள கடலோர பகுதிகளில் நடத்திய ஆய்வில் கடல்
பாதிப்பை பதிவு செய்து உள்ளனர் .

கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் வெளியேறும்  கழிவுகள்
ஒரு வருடத்திற்கு 30  டன்
60 வருடங்களுக்கு  1800 டன்
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் ,மிக பெரிய இழப்பு வரும்.

அமெரிக்கா ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளால் அணு உலை விபத்தைத் தடுக்க
முடிய வில்லை .இந்தியாவில் விபத்தைத் தடுக்கவே முடியாது .
ஒரு வேளை வெடித்தால் தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தமிழகத்தை
விட்டு வெளியேறி விட முடியுமா ?

கதிர்  வீச்சு காரணமாக இறந்து உள்ளனர்
1986-2005
985000இறந்து உள்ளனர்

சீநோபி விபத்தில் வெளியேற முடியாமல் இறந்தனர் இன்னும் 1000ஆண்டுகளுக்கு
இறப்பு எண்ணிக்கை தொடரும் .
கூடங்குளம் அணு உலை விபத்து ஏற்பட்டால் தென் இந்தியாவிற்கே ஆபத்து .
உலகில் இதற்கு முன்பு அணு உலை விபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம்
கதிரியக்கம் வெளியேறி வருகின்றது

கருத்துகள்