கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

முல்லை பெரியாறு அணையை பிரிடீஷ் அரசு ஒதுக்கிய நிதி போதாமல் தன் சொந்த சொத்துக்களை வித்துக்
கட்டினார்.
திரு . பென்னி குக் என்ற மாமனிதர் .முல்லை பெரியாறு அணையை இடிக்க நினைப்பது அந்த தன்னலமற்ற தியாகி திரு .பென்னி குக்  அவர்களுக்கு செய்யும் பச்சைத்  துரோகம் வெள்ளையருக்கு இருந்த மனிதாபிமானம் கேரளா மனிதர்களுக்கு இல்லை .

புதிய அணை கட்டுகிறோம் என்ற பெயரில் சில கோடிகளை அரசியல் வாதிகள் சுருட்டுவதை தவிர வேறு ஒன்றும் நோக்கம் இல்லை .
காங்கிரஸ் அரசு இது வரை போட்ட திட்டங்களில்
அரசியல் வாதிகள் சுருட் டியத்தைப் பார்த்து உலகமே சிரிக்கின்றது.

500ஆண்டுகளுக்கு திடமாக உள்ள அணையை உடைக்க  வேண்டும்  .புதிய அணை கட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.நன்றி மறந்தவர்கள் .நெய்வேலியில் இருந்து தமிழ் நாட்டு மின்சாரம் கேரளா செல்கின்றது .மாட்டுக் கறி உண்ண அடி மாடுகள் சாரை சாரையாக தினமும் கேரளா செல்கின்றது .அரிசி பருப்பு என அனைத்துப் பொருள்களும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றது .உண்டு கொளுத்து விட்டு வஞ்சனை செய்கிறார்கள் .

அணை இடிவது போல கிராபிக்ஸ் காட்சி குறுந்தகடு வெளியிட்டார்கள் .அணை இடிவது போல பித்தலாட்டமான படம்
அணை 999   தயாரித்து உள்ளார்கள்.பாராளு மன்றத்தில் கேரளா  அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்  ஓரணியில் நின்று .புதிய அணை வேண்டும் என்று  வம்பிற்கு குரல் கொடுக்கின்றனர்.ஆனால் தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் இது வரை எந்தப் பிரச்சனைக்கும்     ஓரணியில் நிற்பதே இல்லை .
பத்மநாபபுரம் கோயில் நகைகள் அனைத்தும் தமிழகத்திற்கு சொந்தம் என்று ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் விளக்கி உள்ளனர் .எனவே   பத்மநாபபுரம் கோயில் நகைகள் அனைத்தும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டும் .


தமிழகத்தில் லட்சக் கணக்கான மலையாளிகள் பிரபல நகைக் கடைகள் ,ஜவுளிக் கடைகள் ,
போக்கு வரத்து நிறுவனங்கள்,

தேநீர்க் கடைகள் என பலவாறு நிறுவனங்கள் நடத்திக் கொண்டு மிகவும் வளமாகவும் ,நலமாகவும் .பாதுகாப்பாகவும் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, இப்படி பல்வேறு காரணங்களை மனதில் கொண்டு கேரளா அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் .வதந்தி பரப்பும் அணை 999 திரைப்பட இயக்குனரை கைது செய்ய வேண்டும் .
மனித நேய அடிபடையில் மனிதாபிமான அடிப்படையில் நாடு அமைதியாக இருக்க கேரளா ஒத்துழைப்புத் தர வேண்டும் .வீண் வம்பை விலைக் கொடுத்து வாங்க வேண்டாம் என்று கேரளாவிற்கு எச்சரிக்கை செய்கிறோம் .இங்குள்ள மனிதாபிமானமுள்ள  மலையாளிகளும்  அவர்கள் சங்கத்தின் சார்பாக கேரளாவிற்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் .தமிழன் சண்டைக்குப் போக மாட்டான் அனால் வந்த சண்டையை விட மாட்டான். என்பது வரலாறு .    
 
     
திடமாக உள்ள அணையை உடைக்க  வேண்டும்  .புதிய அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து பொய்யாகக் குரல் கொடுக்கிறார்கள். பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னாலும் மெய் ஆகி விடாது .பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு ,தமிழன் பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் தாங்க முடியாது .மனிதாபிமானத்தை ஏமாளித்தனம் என்று தவறாக எண்ணி விடாதீர்கள் .   மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆளும்  காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக எச்சரிக்கை செய்ய வேண்டும் .தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்தான்    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டு  இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்