தமிழில் புதிய முயற்சி லிபுன் கவிஞர் .இரா .இரவி

தமிழில் புதிய முயற்சி 

லிபுன்              கவிஞர் .இரா .இரவி

காதல் ஜோடி இருவர் .ஆனால் அருகே பலர் .நேரடியாகப் பேசிக் கொள்ள முடியாத சூழ்நிலை .இருவரும் அருகில் உள்ள பலருக்கும் தெரியாமலே விழிகளாலே பல பேசினார்கள் .சம்மந்தப்பட்ட    இருவருக்கும் நன்கு புரிந்தது .ஆனால் அருகில் இருந்த எவருக்கும் எதுவும் புரியவில்லை .காதல் மொழி பேச இதழ்கள் வேண்டாம் .விழிகளே போதும் என்று பேசிவிட்டு இருவரும் விடைப்பெற்று சென்றனர் .காதலி என்ன சொன்னாள்.காதல
ன் என்ன சொன்னான் என்பது இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் .

பேசும் அவள் விழிகள்
காதல் மொழி நாளும் சொல்லும்
ஒய்வு எடுத்தன இதழ்கள்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லிபுன்              கவிஞர் .இரா .இரவி மலர்க்கண்காட்சி யின்  உள்ளே நுழைந்தான் .பார்த்தான் பரவசம் அடைந்தான் .இத்தனை வண்ணங்களா ? வியந்தான் .இயற்கையின் இனிய கொடை எண்ணங்களை இனிமையாக்கியது.மலர்களில் எந்த மலர் சிறந்த மலர் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் .
ஒவ்வொரு மலரும் ஒருவித அழகு .வாழ்நாள் குறைவு என்றாலும்,வாடாமல் சிரிக்கும் மலர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டான் .  
மலர்க்கண்காட்சி காண்பது    மனதிற்கு மகிழ்ச்சி ,குளிர்ச்சி என்பதை உணர்ந்தான் .

மனதை வருடும் 
மலர்க்கண்காட்சி
மண்ணில் மலர்ந்த மலர்களின் ஆட்சி
பரவசம் பார்த்தவர்கள் சாட்சி

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்