ஈழப் படுகொலை இன்று உலகம் அறிந்துக் கொண்டது . ஈழப் படுகொலை குறித்து கவிஞர் இரா .இரவி அன்றே எழுதிய கவிதைகள் !

ஈழப் படுகொலை இன்று உலகம் அறிந்துக் கொண்டது . ஈழப் படுகொலை குறித்து   கவிஞர் இரா .இரவி அன்றே எழுதிய கவிதைகள் !


ஹைக்கூ ராஜபட்சே      கவிஞர் இரா .இரவி
ஹிட்லரின் தற்கொலை
முடிவை நீயே எடு
ராஜபட்சே

மரணம் உறுதி
விரைவில் இறுதி
ராஜபட்சே
தப்புச் செய்தவன்
தப்பிக்கப் பார்க்கிறான்
ராஜபட்சே
பலநாள் கொலைகாரன்
ஒரு நாள் அகப்பட்டான்
ராஜபட்சே
கெட்டிக்காரன் புளுகு
எட்டு நாளைக்குதான்
ராஜபட்சே

வணங்கிய புத்தரும்
கைகழுவினார்
ராஜபட்சே
மொட்டைப் பிட்சுக்களால்
காக்க முடியாது உன்னை
ராஜபட்சே
எத்தனுக்கு எத்தன்
உலகில் உண்டு உணர்
ராஜபட்சே
முகத்தில் தெரியுது
மரணபயம் உனக்கு
ராஜபட்சே
வினை விதைத்தவன்
வினை அறுப்பான் உண்மை
ராஜபட்சே
கூட்டுக்களவானி   பொன்சேகா
உன்னுடன் இல்லை
ராஜபட்சே  

http://eraeravi.wordpress.com/2011/04/30/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87/


துளிப்பா கவிஞர் இரா .இரவி

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை
ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை
வாழ வழியின்றி முள்வேலி
வாடி வதங்கினர் குழந்தைகள்
இழவை கேட்க நாதியில்லை


 
உலக மகா கொடூர கொலைக்காரன்
உலக வலம் நாளும் வருகிறான்
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்
ஒருவரும் தட்டி கேட்கவில்லை
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்
http://tamilparks.50webs.com/tamilpoem/tuleepaa_ravi_madurai.html
மறையவில்லை முத்துக்குமார்
கவிஞர் இரா. இரவி, மதுரை
 
உடலால் உலகை விட்டு மறைந்த போதும்
உணர்வாளர்களின் உள்ளத்தில் என்றும் வாழ்கிறாய்

மரண வாக்கு மூலத்தை இறபிற்க்கு முன்
மின்னஞ்சல் அனுப்பி அதிர்ச்சியில் ஆழ்த்தினாய்

உலகில் தற்கொலை செய்வது கோழைத்தனம்
உந்தன் தற்கொலையோ நல் வீரத்தின் இலக்கணம்

உடலுக்கு தீ மூட்டி பரவிய ஒளியில்
உணர்வினை எமக்கு புகட்டிய புத்தன்

உந்தன் கோரிக்கையை ஆள்வோர் ஏற்று இருந்தால்
ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து இருப்பார்கள்

சர்வதேச சமுதாயத்திற்கு படு கொலைகளை
கவன ஈர்ப்பு செய்த திருமகன்

ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் காக்க வேண்டி
ஒப்பற்ற உன் உயிர் மாயித்த மா வீரன்

ஈழத்தமிழர்கள் லட்சிய வரலாற்றில்
இனிய இடம் உனக்கு உறுதியாக உண்டு

கொலைகாரன்களிடயே நடந்த தேர்தலில்
பெரிய கொலைகாரன் வெற்றி பெற்றான்

கொட்டு இல்லாமல் ஆடுவான் இனி
வெற்றி கொட்டு கிடைத்ததால் கூடுதலாக ஆடுவான்

ஆணவக்காரர்களின் ஆட்டம் நிரந்தரம் அன்று
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை

இருள் மறைந்து ஒளி பிறக்கும் உறுதி
தனித்தமிழ் ஈழம் விரைவில் மலர்வதும் உறுதி
http://tamilparks.50webs.com/tamilpoem/muthu_kumar_ravi_madurai.html
சுந்தர இலங்கை
 
சுந்தர இலங்கை
சுடுகாடானது
சிங்கள இனவெறியால்
ராஜ பட்சே 
  கவிஞர் இரா. இரவி, மதுரை
கணினி யுகத்தின் கொடுங்கோலன்
காட்டுமிராண்டிக்கு எடுத்துக்காட்டு
ஆசையை அறவே அழித்த புத்தன்
தமிழரை அறவே அழித்த பித்தன்
ஹிட்லரை பார்க்காதவர்கள்
இவனைப் பாருங்கள்
ஹிட்லர் தற்கொலை செய்தான்
இவனும் தற்கொலை செய்வான்
தற்கொலைக் கான கருவி
துண்டை அணிந்தே இருப்பவன்
கொலை செய்த கொலை பாதகன்
கவலை வேண்டாம காப்பேன் என்கிறான்
ஆடுகளை ஓநாயிடம் ஒப்படைக்கும் உலகம்
சாவதேச குற்றவாளிக்கு சிகப்பு கம்பளம்
விரிக்கும் அயிய் நா மன்றம்

 

http://tamilparks.50webs.com/tamilpoem/raja_batch_ravi_madurai.html
நெஞ்சு பொறுக்க வில்லை ஹைக்கூ கவிஞர் இரா. இரவி, மதுரை
 
நெஞ்சு பொறுக்க வில்லை
ஆண்ட இனம் வந்தேறியின்
சிறையில்

உலக ரவுடி
அன்று புஷ்
இன்று ராஜ பட்சே

முள் வேலியில்
மூன்றை லட்சம் தமிழர்
மவுனத்தில் உலக தமிழர்

கொலைகார நாட்டில்
கிரிகெட் விளையாடும் இந்தியா
வேதனையில் தமிழர்

நந்தவனத்தை சுடுகாடாக்கிய
நயவஞ்சகன்
ராஜ பட்சே

கொடி கட்டி வாழ்ந்தவர்களை
ஊர் கோடியில் சிறை வைத்த விலங்கு
ராஜ பட்சே

உயிராய் தமிழை நேசித்த
தமிழரின் உயிர் பறித்த கொடூரன்
ராஜ பட்சே

 
 
தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?
 
இரா. இரவி, மதுரை


இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி
எத்தனையோ பேர் உயிர் மாயித்தனர்
உண்ணாவிரதம் இருந்தனர் பலர்
உயிரையும் உடலையும் தீயுக்கு இரையாக்கினர்
மாவீரன் முத்துக்குமார் மரித்த்போதே
மூர்க்கப்போரை நிறுத்தியிருந்தால்
ஈழத்தில் லட்சம் உயிர் வாழ்ந்திருக்கும்
ஈழ தமிழும் அழகாய் நிலைத்திருக்கும்
கடுமையாக கவன ஈர்ப்பு செய்த போதும்
கண்டுகொள்ளவில்லை ஆளும் காங்கிரஸ்
ஒட்டுமொத்த தமிழினமே அழிந்தது ஈழத்தில்
ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை
விலை மதிப்பற்ற மனித உயிர்கள்
விலை போனது காங்கிரஸ் அலட்சியத்தால்
தனி ஒரு மனிதன் சந்திரசேகர் உண்ணாவிரதத்தால்
தனி தெலுங்கானா உருவாக்க சம்மதித்த காங்கிரஸ்
இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் ஒருவர்
இனி உண்ணாவிரதம் இருந்தால் பிரிப்பார்களா ?
தெலுங்கர் உயிர் மட்டும் உசத்தியா ?
தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?
மவுனமாக இருந்தே மவுன வலி தந்தனர்
மவுனமாக இருந்தே தமிழர் தக்க பதில்தருவர்
 
இலங்கை ஹைக்கூஇரா. இரவி, மதுரை
 
சுதந்திரம் தருவேன் பத்திரிக்கைகளுக்கு
சாத்தான் வேதம் ஓதியது
சரத் பொன்சேகா

ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்
ராஜபட்சே பொன்சேகா

கொலைகாரன்களில்
சிறந்தவன் யார் ?
இலங்கை தேர்தல்
 


உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை – இரா.இரவி

பதியப்பட்ட நாள்June 22nd, 2010 நேரம்: 15:06
Mullivaikal ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால்
லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களின்
உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு போனது
உயிரோடு மண்ணில் போட்டுப் புதைத்தான் ராஜபட்சே
ஈழத்தில் சிங்களனாகப் பிறந்து இருந்தால்
இந்தக் கொடுரக் கொலைகள் நடந்து இருக்காது
உலகத் தமிழர்களில் பலர் வேடிக்கைப்
பார்த்ததைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை
கிராமத்தில் ரத்த சொந்தம் ஒருவர் இறந்தால்
குடும்பத்தில் பொங்கல் கொண்டாட மாட்டார்கள்
ஈழத்தில் ரத்த சொந்தம் லட்சத்திற்கும் மேல்
இறந்ததால் உணர்வாளர்களுக்கு செம்மொழிமாநாடு
இனிக்கவில்லை .
மகாகவி இன்று இருந்து இருந்தால்
செந்தமிழ் நாடு எனும் போதினிலே
துன்பக் கண்ணீர் வழியுது விழிகளிலே
என்றே பாடி இருப்பான் .
தமிழினம் வீழ்ந்து தமிழ் வாழ்ந்து என்ன பயன் ?
http://meenakam.com/2010/06/22/772
http://tamilkurinji.com/Ilakkyam_details.php?/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/-/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF//////&id=15675



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!

கருத்துகள்