இந்தியாவின் கேவலமான நிலைப்பாடு கவிஞர் இரா .இரவி

இந்தியாவின் கேவலமான நிலைப்பாடு   கவிஞர் இரா .இரவி

இந்தியாவிற்கு தமிழன் வேண்டுமா ? சிங்களன் வேண்டுமா ?என்ற கேள்விக்கு எங்களுக்கு
சிங்களன்தான் வேண்டும் தமிழன்  தேவை இல்லை என்று பதில் தந்து உள்ளனர் .இளித்த வாயன் தமிழன் இனியாவது விழிக்க வேண்டும் .உலகமே இந்தியாவை கேவலமாகப் பார்க்கின்றது .வெளியுறவு அமைச்சரின் இந்த பதில் எதிர்ப்பார்த்த ஒன்றுதான் .காரணம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் .கொலைக் குற்றவாளியான ராஜபட்சே இந்தியாவைக் காட்டிக் கொடுக்க தயங்க மாட்டான் .தமிழ் இனப் படுகொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தது ,ராணுவ உதவி,  ஆயுத உதவி ,தொழில் நிற்ப உதவி அனைத்தும் இந்தியாதான் என்று தங்களை காட்டிக் கொடுத்து விடுவான் என்ற பயம் இந்தியாவிற்கு உள்ளது .கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குதான் .இந்தியாவின் புளுகு சில நாட்களுக்குத்தான் விரைவில் அனைத்து உண்மையும் வெளி வரும் .அன்று இந்தியாவின் முகத்திரை கிழியும்.கொலைக்காரனே கொலைக் குற்றத்தை விசாரிக்க வேண்டுமாம்  வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவின் நகைச்சுவை .

ராமேஸ்வரத்தில் அப்பாவி மீனவர்களை இலங்கை ராணுவம் காக்கை குருவி சுடுவதுப் போல சுட்டப்போதேல்லாம் இந்திய ராணுவம் அமைத்து காத்ததன் ரகசியம் விளங்குகின்றது .

தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் தூக்கி   எறியப் பட்டு    பல வருடங்கள் ஆகி விட்டது.சமீபத்தில் நடந்த தேர்தலில் பல மாநிலங்களில் படு தோல்வி சந்தித்தும் .திருந்த வில்லை .இந்தியாவில் இருந்து
காங்கிரஸ் தூக்கி   எறியப் படும் நாள் விரைவில் வருகிறது .  
தமிழ்நாட்டில் காங்கிரசிற்கு தொண்டர்கள் யாருமே இல்லை .ஒரு சில தலைவர்கள்தான் கோஸ்டி சண்டை போட்டுக் கொண்டு ,பதவி சுகத்திற்க்காக இருகின்றனர் .இனி மானமுள்ள தமிழன் எவனும் காங்கிரசில் இருக்க மாட்டான் .தமிழின விரோதியாக காங்கிரஸ் ஆகி விட்டது .தந்தை பெரியார் சொன்னதுப் போல காங்கிரசை ஒழிப்பதே ஒழிப்பதே ஒவ்வொரு தமிழனின் கடமையாக இருக்க  வேண்டும் .காங்கிரசை வேரோடும்   வேரடி மண்ணோடும் வீழ்த்திடுவோம்.வாருங்கள் .தமிழர்களுக்கு இன உணர்வை கற்பித்த காங்கிரசிற்கு நன்றி   

கருத்துகள்