விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி

விழிக்கொடை !             கவிஞர் இரா .இரவி

வந்தது பார்வை
பார்வையற்றவர்களுக்கு
விழிக்கொடை !  

இறந்தப் பின்னும்
இறக்காத விழிகள்
விழிக்கொடை !  

மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம்
மனிதர்களுக்கு வேண்டும்
விழிக்கொடை !  

கரு விழிகள்
அகற்றியது இருள்
விழிக்கொடை !  

வாழ்கிறான் கொடையில்
வள்ளல் கர்ணன் 
விழிக்கொடை !  

உயிர்
ப் பிரிந்தும்
உயிர்ப் பெற்றது
விழிக்கொடை !  

உடல் மாறியும்
உயிர் உள்ளது
விழிக்கொடை !  

ஒளி ஏற்றியது
வழி காட்டியது
விழிக்கொடை !  

துன்பம் துரத்தி
இன்பம் ஈந்தது
விழிக்கொடை !  

குறையை நீக்கி
நிறைவாக்கியது
விழிக்கொடை !  

மரிக்கவில்லை மனிதம்
மனிதரில் புனிதம்
விழிக்கொடை !  

வைத்தது முற்றுப்புள்ளி
மூடநம்பிக்கைக்கு
விழிக்கொடை !   

செத்தப்பின்னும்   
சாகவில்லை
விழிக்கொடை !  

இறப்பிலும் பிறப்பு
இறக்கத உறுப்பு
விழிக்கொடை !  

மரணித்தும் மரணிக்கவில்லை
முடிவிலும் இனிய தொடக்கம்
விழிக்கொடை !  

கருத்துகள்