தாஜ்மகால் ! கண்டவர் கவலைகள் காணாமல் போகும் கவிஞர் இரா .இரவி

தாஜ்மகால் ! கண்டவர் கவலைகள்  காணாமல் போகும்    கவிஞர் இரா .இரவி

இந்தியாவில் உள்ள உலக அதிசயம்
இந்தியா வருவோர் பார்க்கும்  அதிசயம்

பளிங்கி கற்களால் ஆன மாளிகை
பார்ப்பவர்களுக்கு பிறக்கும் உவகை 

காதலர்கள் செல்ல விரும்பும் இடம்
காதலர்கள் பரிசளிக்கும் பொருள்

பிரமாதம் பிரமாண்டம் பிரமிப்பு
பார்த்தவர்கள் பிரமிக்கும் வனப்பு    

இது போல் ஒரு மாளிகை
இந்த உலகில்
எங்கும் இல்லை

இது போல் மாளிகை யாராலும் 
இனி யாராலும் எழுப்ப முடியாது 

ஷாஜகான் உயிரோடு இல்லை
மும்தாஜ் உயிரோடு இல்லை

அவர்களின் காதல் சின்னம் வாழ்கின்றது
அனைத்து காதலர்களின் உள்ளங்களில் 


புகைப்படத்தில்  திரைப்படத்தில்
பார்த்தாலே பிரமிக்கும் விழிகள்

நேரில் பார்த்தால் அடையும் பரவசம்
வார்த்தைகளில் வடிக்க இயலாது

காதல் சின்னத்தை எல்லோரும்
கட்டாயம் சென்று பாருங்கள்

பார்த்தவர்கள் உள்ளம் பறிப்போகும்     

கண்டவர் கவலைகள்  காணாமல் போகும்







நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

கருத்துகள்