வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி

வேண்டும் விடுதலை !  வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி

வேண்டும் விடுதலை !  வேண்டும் விடுதலை !
வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 
விடுதலை !

பன்னாட்டு ராணுவத்தால் படை தொடுத்தவனோடு
பகை மறந்து வாழ்வது இனி சாத்தியமில்லை !  

நாட்டு மக்களையே காட்டுமிராண்டித்தனமாக அழித்த 
நயவஞ்சகனோடு இணக்கம்
இனி சாத்தியமில்லை !

மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற கொடியவனை
மகாத்துமா  இருந்தால்
கூட மன்னிக்க மாட்டார்  !

கொன்றது போக எஞ்சியோரை சிறைப்பிடித்து
முள்வேலியில்  இட்டவனோடு வாழ்வது சாத்தியமில்லை ! 

ஜாலியன் வாலாபாக் படுகொலையை  விட கொடியது
சிங்களப்படை ஈழத்தில் நடத்திய  படுகொலைகள் !

நாட்டு மக்களின் மீது குண்டு  மழை  பொழிந்தவனை 
நாட்டின் அதிபராக மதிக்க மனம் வருமா ?

வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும்
வஞ்சகமாகக் சுட்டவனை மன்னிக்க  முடியுமா ?

மூப்பென்றும் பிஞ்சென்றும் பெண்னென்றும் பாராமல் 
மூர்க்கமாக அழித்தவனை மதிக்க முடியுமா ? 

தமிழ் இனத்தையே அழித்தது இலங்கைப் படை
தன் மக்களையே ஒழித்தது இலங்கை அரசுப்படை !
     
கொலை பாதகம் புரிந்த கொடியவர்களுடன்
கூடிவாழுங்கள் என்று போதிக்கும் மூடர்கள் !

இனவெறி பிடித்த சிங்களப்படை  மிருகங்களோடு
இணைந்து  வாழ்வது இனி இயலவே இயலாது !


இறையாண்மை என்ற பூச்சாண்டி காட்டி
இலங்கை இரண்டாகாது  என்கின்றனர் !

அய் .நா. மன்றமே மவுனம் போதும் !
அநியாயம் புரிந்தவனுக்கு தண்டனை கொடு !

தெற்கு சூடான் உதயமானது தனி நாடாக !
தமிழ் ஈழமும் உதயமாகட்டும் 
தனி நாடாக !

ஈழக்கொடி பறக்க வேண்டும் அய் .நா. மன்றத்தில்
ஈழத்தூதுவர் அலுவலகம் திறக்க வேண்டும் இந்தியாவில்  !
 

இலங்கையை உடன் இரண்டாக்கு ஈழத் தமிழர்களை ஒன்றாக்கு !
இனியும் சிங்களரோடு
ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை !
 

சிங்களரும் தமிழரும் இனி இணைந்து வாழவே  முடியாது !
சிந்தித்துப் பார்த்து பிரித்து வைப்பதே இருவருக்கும் நன்மை

ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லு
வது வெட்டிப்பேச்சு
ஒருபோதும் இனி ஒத்துவராது உணருங்கள் !

ஈழத்தில் குடி புகுந்த சிங்களரை வெளியேற்றுங்கள்
ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களை குடி அமர்த்துங்கள் !


இரண்டுபட்ட இலங்கை என்று ஆக்குவதே
இரண்டு இனத்திற்கும் பாதுகாப்பு அறிந்திடுங்கள் !


ஈழம் ஈழத் தமிழருக்கு உடன் கிடைத்தாக வேண்டும்
ஈழத்தில் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் !

உலகத் தமிழர்களே உரக்கக் குரல் கொடுங்கள்
உதயமாகட்டும் ஈழத்தில் தமிழரின் தனி நாடு !


--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்