இலங்கை நட்பு நாடாம் கவிஞர் இரா .இரவி

இலங்கை நட்பு நாடாம்                           கவிஞர் இரா .இரவி

இந்தியாவிற்கு இலங்கை நட்பு நாடாம்  சரி
இந்தியாவிற்கு தமிழ்நாட்டுத் தமிழர் பகைவர்களா ?

தினந்தோறும் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றான்
தமிழர்களைக்  கொல்கிறான் சிறைப் பிடிக்கிறான்

மீனவர்கள் நாள்தோறும் செத்துப் பிழைக்கின்றனர்
மனம் போன போக்கில் வன்முறை புரிகின்றான் ஈழத்தில் தமிழினத்தையே கூண்டோடு  அழித்தவன்
ஈனப்பிறவியான  சிங்களன் இவர்களுக்கு நண்பனாம்

சீனாவின் நண்பன் இந்தியாவிற்கும் நண்பனா ?
சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று !

சீனாவோடு சேர்ந்து இந்தியாவையும் தாக்குவான்
சிங்களன் அன்று உணர்வாய் சிங்களம் குணம் !

உலகமகா ரவுடிக்கு ராணுவப் பயிற்சியாம் !
உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மடையர்கள் !

தமிழின விரோதி இந்தியாவிற்கு நண்பனாம் !
தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியர்கள்தானே ?

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இன்புறும்
வீணர்கள் திருந்த வேண்டும் மறுத்தால் திருத்தப் படுவாய் !

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்
இழி செயலை உடனே நிறுத்திடுக !எதையும் தாங்கும் இதயம் உண்டு தமிழருக்கு
இதனைத் தாங்கும் இதயம் இல்லை எங்களுக்கு !
கொடியவன் கொடூரன் கொலைகாரன் சிங்களனை
கூசாமல் சொல்கிறாய் நண்பன் என்று !


பாம்புக்குப் பால் வார்க்காதே ! என்று
பாரதப் பிரதமருக்கு எதனை முறை சொல்வது !

திருப்பி அனுப்புவதும் திரும்ப அனுமதிப்பதும்
தவறு செய்வதும் வாடிக்கையானது !


பேராயக் கட்சியின் முடிவுரையை எழுதுகிறார்கள்
பேராயக் கட்சியினரே எழுதிக் கொள்கிறார்கள் !


தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும்
தானாகவே வீழ்வதற்கு வழி தேடி வருகின்றனர்
!

ஊழலின் மொத்த உருவமாக பேராயக்கட்சி
உலக மகா  உழல் கண்டு உலகம்  சிரிக்கின்றது
!

--

கருத்துகள்