நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .

நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே !   கவிஞர் இரா .இரவி .

இலங்கையிலே தமிழர்களைக்  கொன்று குவித்தான்
ஏன் ? என்று கேட்க நாதி இல்லை உலகில் !

தமிழக மீனவர்களை சிங்கள  இன வெறிப்படை   
தினமும் தாக்குகின்றான் தடுக்க
நாதி இல்லை !

நோயாளியாக வந்த தாயை நுழைய விடாமல்
மன நோயாளிகள் திருப்பி அனுப்பினார்கள் !

கொலைகாரன் கொடூரன் இனவெறியன் வந்தால்
கைகட்டி வாய் பொத்தி ரத்தினக் கம்பள வரவேற்பு !

தமிழ் இனத்தையே அழித்து  ஒழித்த
சிங்களப்படைக்கு 
தமிழக ராணுவ முகாமில் பயிற்சி தருகின்றனர் !

இறந்த பிணங்களையும் எட்டி உதைத்
சிங்களனுக்கு
இந்தியாவில் கால் பந்தாட்டப் பயிற்சி தருகின்றனர் !

தமிழர்களை சின்ன பின்னப் படுத்திய சிங்களர்கள்
தமிழகதிற்கு மகிழ்ச்சி சுற்றுலா வருகின்றனர் !

மக்களின் உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகளை
மக்கள் உணர்வுக்கு எதிராகத் திறக்கிறார்கள் !

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது
மூட மலையாளிகள்  உடைந்து விடும் என்கின்றனர் !

கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை
கட்டிய அணையில் தேக்கத்    தடுக்கின்றனர் !

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டி
தமிழகத்தின் வயிற்றில் அடிக்கத் துடிக்கின்
றனர் !

கல் நெஞ்சம் படைத்த கர்னாடகத்த்தினர்
காவிரி நீரை சிறைப் பிடித்து வைத்துள்ளனர் !

தமிழகத்தில் தமிழ்ப்பள்ளிகளை மூடி
ஆங்கிலப் பள்ளிகளை
ப் பெருக்கி விட்டனர் !

ஊடகங்களின் உச்சரிப்பில் தமிழ் இல்லை
உளறுகின்றனர் தமிங்கிலம் பரப்புகின்றனர் !

பாறைகளை வெட்டி வீழ்த்தி கோடிகளைச் சுருட்டி 
பூகம்பம் வருவதற்கு  வழி வகுத்து விட்டனர் !   

மக்களுக்கான அரசியல்வாதிகள் இல்லை
தன் மக்களுக்கான
அரசியல்வாதிகளே உள்ளனர் !

தமிழுக்கும் தமிழருக்கும் வஞ்சனை செய்கின்றனர்
தடுக்க தட்டிக் கேட்க நாதி இல்லை தமிழர்களுக்கு !


நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே !

கருத்துகள்