எழுத்து ! கவிஞர் இரா .இரவி .

எழுத்து !        கவிஞர் இரா .இரவி .

( பொதிகை  மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு  )

அறிந்தது மனதில் நின்றது
அறியாத
து அறிய வைத்தது 
 எழுத்து !
-------------------------------------
மனிதனின் வளர்ச்சிக்கும்
சாதனைக்கும் காரணம்
எழுத்து !
------------------------------------
இல்லாத  உலகம்
நினைக்கவே அச்சம் !
எழுத்து !

-------------------------------------------
திருவள்ளுவரை
உலகிற்கு
க் காட்டியது
எழுத்து !
---------------------------------
அறிஞர்க
ள் கவிஞர்கள்
எழுத்தாளர்கள் மூலப் பொருள்
எழுத்து !
-------------------------------------------
-----------------------------------------------
ஒலி வடிவம் வரி வடிவமானது

நாகரீகத்தின் தொடக்கம் மொழியின் உச்சம்
எழுத்து !
----------------------------------------------
தோன்றாமல்  இருந்திருந்தால்
ஆதிவாசியாகவே இருந்திருப்பான்
எழுத்து !
---------------------------------------------
அறிவு வளரவும் ஆள் வளரவும் 

உதவியது எழுத்து !------------------------------------------
பார்வையற்றவர்களும்
தடவி உணரும் உன்னதம்

எழுத்து !
------------------------------------------
ஆற்றலையும் வீரத்தையும்
பறை சாற்றியது கல்வெட்டு

எழுத்து !
-----------------------------------------
காவியம் காப்பியம்
காத்தது ஓலைச்சுவடி

எழுத்து !
------------------------------------------


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்