ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ           கவிஞர் இரா .இரவி .
முட்டாளை அறிவாளியாக்கும்
அறிவாளியை மேதையாக்கும்
சுற்றுலா !
அறிவுறுத்த   வேண்டியுள்ளது
மனிதனாக வாழ
மனிதனை !

மண்ணுக்கு அருகில் இருந்ததால்
அதிக இனிப்பு
அடிக்கரும்பு !

மெய்ப்பன்  இன்றியே
இல்லம் வந்தன
ஆடுகள் !

களங்கமானது 
மனிதனின் கால் பட்டதால்
நிலவு !

வாழ்க்கை முரண்பாடு
பணக்காரனுக்கு பசி இல்லை
ஏழைக்கு பசி தொல்லை !

அறிந்திடுங்கள்
சோம்பேறிகளின் உளறல்
முடியாது நடக்காது தெரியாது !

சாதிக்கின்றனர்
கைகள் இன்றி
கைகள் உள்ள நீ !

வாழ்க்கை இனிக்கும்
கொடுத்ததை மறந்திடு
பெற்றதை மறக்காதிரு !

 
கவனம் தேவை
சிக்கல் இல்லை
சிந்தித்துப் பேசினால் !

விரல்களால் தெரிந்தது
விழிகளில் உலகம்
இணையம் !

உணர்த்தியது
பசியின் கொடுமை
நோன்பு !

வக்கிரம் வளர்க்கும் 
வஞ்சனைத் தொடர்கள்
தொலைக்காட்சிகளில் !



www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!

கருத்துகள்