நீ அழகா ? உன் உடை அழகா ? கவிஞர் இரா .இரவி .

நீ அழகா ? உன் உடை அழகா ? கவிஞர் இரா .இரவி .

புறாக்களின் பசி போக்கும் பெண் புறாவே !
பாவையின் மனதில் சோகம் ஏனோ ?
அழகிய தாவணி அணிந்த வெண்ணிலவே !
அன்புக் காதலன் வரவில்லையோ ?
அகல் விளக்கின் கீழ் உள்ள சுடர் விளக்கே !

அழகே உருவான அற்புத தேவதையே !
நீ அழகா ? உன் உடை அழகா ?
நடந்தது பட்டிமன்றம் .
நடுவர் தீர்ப்பு சொல்ல முடியாமல்
இரண்டும் அழகுதான் என்றார் .

கருத்துகள்