மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் , பேராசிரியர் போத்தி  ,திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன் ,திரு C.ராஜேந்திரன் ,
திரு .அழகர் சுவாமி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே.விஸ்வநாதன் ஆகியோர் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .
 
" நுகர்வோரின் தன்னம்பிக்கை " என்ற தலைப்பில் திரு G. ராம மூர்த்தி  தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .   பல பயனுள்ள கருத்துக்கள் கூறி பயிற்சி அளித்தார் .நுகர்வோர் எப்படி எல்லாம் ஏமாற்றப் படுகிறார்கள் என்பதை விளக்கி  கூறினார் .நுகர்வோரின் விழிப்புணர்வு  பற்றி உரிமைகள் பற்றியும் விளக்கினார்  .நுகர்வோரின் உரிமைகள் மறுக்கப்படும் போது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் .நுகர்வோர் நீதி மன்றத்தின் உதவியால் சாதித்த சாதனைகள் . மாணவி பாண்டிச்செல்வி நுகர்வோர் விழிப்புணர்வு   கருத்துக் கூறினார் . திரு.தினேஷ் நன்றி கூறினார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் திரு . திரு .ஜான், திரு .மோகன் உள்ளிட்ட   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் . 

கருத்துகள்