தந்தைப்பெரியார் புரட்சி மொழிகள்

தந்தைப்பெரியார்                                          புரட்சி மொழிகள்


  - மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
  - பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
  - மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  - விதியை நம்பி மதியை இழக்காதே.
  - மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  - மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  - பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  - பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  - பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  - தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
  - கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து
  கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  - பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும்,
  உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  - ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள்
  ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  - ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு
  விடக்கூடாது.
  - வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள்
  நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  - ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ,
  அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  - என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல்
  எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை
  நம்புகிறவன்.
  - எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து,
  சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  - மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக
  ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

கருத்துகள்