சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி

சாகாமல்  காக்கும் மருந்து தமிழ் !  கவிஞர் இரா .இரவி

சாகாமல்  காக்கும் மருந்து
அமுதம் என்றார்கள் !

அமுதம் நாங்கள் பார்தது இல்லை !
அமுதம் நாங்கள் பருகியது  இல்லை !

அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக
அன்று புராணக்கதை கதைத்தது !

இன்பமாக வாழ வேண்டுமா ?
இனிய தமிழ் படியு்ங்கள் !

துன்பம் தொலைய வேண்டுமா ?
தீ்ந்தமிழ் படியு்ங்கள் !

சோகங்கள் ஒழிய வேண்டுமா?
சந்தத்தமிழ் படியு்ங்கள் !

கவலைகள்  போக வேண்டுமா?
கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் !

விரக்தி நீங்க வேண்டுமா ?
வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் !

ஒழுக்கமாக  வாழ வேண்டுமா ?
ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் !

பண்பாடாக  வாழ வேண்டுமா ?
பைந்தமிழ் படியு்ங்கள் !

நெறிகளை அறிந்திட வேண்டுமா ?
நிதமும் தமிழ் படியு்ங்கள் !

வீரம் அறிந்திட வேண்டுமா ?
விவேகத்தமிழ் படியு்ங்கள் !

சாதி மத வெறி அகற்ற வேண்டுமா?
சீர்மிகு  தமிழ் படியு்ங்கள் !

மனிதம்  மலர்ந்திட வேண்டுமா ?
மயக்கும் தமிழ்  படியு்ங்கள் !

முத்திரை பதிக்க வேண்டுமா ?
முதல்மொழி தமிழ் படியு்ங்கள் !

கற்பனைத்திறன் வேண்டுமா ?
கனித்தமிழ் படியுங்கள் !

சுயமாகச்  சிந்திக்க வேண்டுமா ?
சுந்தரத்தமிழ் படியுங்கள் !

வாழ்வியலை உணர வேண்டுமா ?
வற்றாதத் தமிழ் படியுங்கள் !

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ?
முத்தமிழ் படியு்ங்கள் !

மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ?
மாண்புமிகு  தமிழ் படியு்ங்கள் !

இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ?
இனிமையான தமிழ் படியு்ங்கள் !

சாகாமல் வாழ வேண்டுமா ?
சங்கத்தமிழ் படியு்ங்கள் !

சாகாமல்  காக்கும் மருந்து தமிழ் !
சாதாரணம் தமிழ் முன் அமுதம் !

கருத்துகள்