மரம் ! கவிஞர் இரா .இரவி .

- மரம்  !   கவிஞர் இரா .இரவி .

சுவாசிக்க உதவும்
ரசிக்க உதவும்
மரம்  !

பூ காய் கனி நல்கும்
பொதுவுடமைவாதி
மரம்  !

அசைவது இல்லை
தென்றல் தீண்டாமல்
மரம்  !

வெளியில் தெரியாது
வேர்களின் பயணம்
செழித்திடும் மரம்  !

குறிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
மரம்  !

சிறிய விதையின்
பெரிய பிரமாண்டம்
மரம்  !

நீர் குடித்து
மழைநீர் வரவழைக்கும்
மரம்  !

சொல்லில் அடங்காது
நல்கிடும் நன்மை
மரம்  !

ஆதாம் தொடங்கி அப்துல்
கலாம் வரை நேசிக்கும்
மரம்  !

கருத்துகள்