ஈழம் ! கவிஞர் இரா இரவி !

ஈழம் !     கவிஞர் இரா இரவி !

பாலகனைக்  கொன்றான்
பாவங்கள் புரிந்தான்
தண்டனை உறுதி !

சிறுவனிடம் வீரம் காட்டிய
சின்னப் புத்திக்காரன்
சிங்களப்பகைவன் !

தமிழினம் அழித்தான்
அழிவைத் தேடினான்
இலங்கைக் கொடூரன் !

இறந்த உயிர்கள் எத்தனை ?
கணக்கு இல்லை
அவன் கணக்கு முடியும் !

முள்வேலி தந்தவனுக்கு
சிறைவேலி தரும் நாள்
தமிழர் திருநாள் !

பலநாள் கொலைகாரன்
ஒரு நாள் அகப்பட்டான்
இலங்கை அரக்கன் !

எல்லா நேரமும் எல்லோரையும்
ஏமாற்ற முடியாது
மாட்டி விட்டான் !

அப்பாவிகளைக் கொன்ற
அடப் பாவி அவன்
ஹிட்லரிலும் கொடியவன் !

நாட்டு மக்கள் மீதே
போர் தொடுத்த
போர் குற்றவாளி !

முதியவர்கள் பெண்கள் குழந்தைகள்
மூர்க்கமாகக் கொன்றக் கொடியவன்
எண்ணுகிறான் நாளை !

விடுதலை கேட்டவர்களின்
வாழ்க்கையை முடித்தான்
சிங்கள வெறியன் !

கோயில்களைத் தகர்த்தவன்
திருப்பதி கோயில் வந்தான்
மனித மிருகம் !

இன்றும் உண்டு காட்டுமிராண்டி
எடுத்துக்காட்டு
இலங்கை  வெறியன் !

பகையை முடிப்பான்
தமிழ் ஈழம் ஆள்வான்
எம் தமிழன் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




கருத்துகள்