ஹைகா ! கவிஞர் இரா .இரவி

ஓவியத்திற்கு நான் எழுதிய ஹைகா !
நீங்களும் பங்கு பெறலாம் !

ஹைகா ! கவிஞர் இரா .இரவி

வெட்டப்பட்ட மரத்தில்
கூட்டின் சுவடு
பறவைகளின் கண்ணீர் !

வெட்டாதீர் மரங்களை
பொய்த்திடும் மழை
உணரத்திடும் பறவைகள் !

நிழல் தந்த மரத்திற்கு
நிழல் தந்து மகிழ்கின்றன
சிறகு விரித்து !

வெட்டியவனை விரட்டியடித்து
வேர் காத்தன
நன்றி மிக்க பறவைகள் !

வெட்டப்பட்ட மரதிற்காக
வடித்தன கண்ணீர்
கூடு கட்டிய பறவைகள் !

கருத்துகள்