எண்ணுகிறான் நாட்களை ! கவிஞர் இரா .இரவி !

எண்ணுகிறான் நாட்களை  !    கவிஞர் இரா .இரவி !

அடி மேல் அடி விழுகின்றது .பயத்தில் நாட்களை எண்ணுகின்றான்
தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு பொருளாதர த் தடை விதித்து தீர்மானம் .

சிங்களப் படை வீரர்கள்  ராணுவப் பயிற்சிக்கு வந்தபோது வெளியேற்றப்பட்டனர் .

வெளையாட்டுப் பயிற்சிக்கு வந்த சிங்கள விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் .

அமெரிக்கா கொண்டு வந்த முதல் தீர்மானத்தில் இலங்கை தோல்வி
ராஜபட்சே உறவினர் ராமேஸ்வரத்தில் இருந்து விரட்டப்பட்டார் .

இலங்கையில் இனப் படுகொலை நடந்தபோது வாய் திறக்காமல் மவுனமாக இருந்த புத்தப் பிட்சுகள் தஞ்சாவூரில் தர்ம  அடியுடன் விரட்டப்பட்டனர் .

இலங்கையில் இனப் படுகொலை நடந்தபோது வாய் திறக்காமல் மவுனமாக இருந்த புத்தப் பிட்சுகள் சென்னயில் இருந்து விரட்டப்பட்டனர் .

சிங்களர் இந்தியா செல்ல வேண்டாம் என்று சுற்று அறிக்கை விட்டது இலங்கை .

மதுரையில் மிகிலங்கா அலுவலகம் தாக்குதல் .

இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை .

அமெரிக்கா கொண்டு வந்த இரண்டாவது  தீர்மானத்தில் இலங்கை தோல்வி

இலங்கை .துணைத் தூதரகம் சென்னையில் இருந்து அப்புறப்படுத்த எச்சரிக்கை .

அய் .பி .எல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து இலங்கை விளையாட்டு விரர்கள் ,நடுவர்கள் நீக்கம் .


தமிழக சட்டமன்றத்தில் தமிழ் ஈழம் கிடைக்க இந்திய அரசு அ ய் .நா .வில் தீர்மானம் கொண்டு வர தீர்மானம் .

நடந்தவை முடிவு அல்ல தொடக்கம் இன்னும் இருக்கிறது அடிகள் .

இன ஒழிப்புக்கு துணை நின்ற நாடுகளும் ,கை கொடுத்த நாடுகளும் உலக நாடுகளின் அவமானத்திற்குப் பயந்து இலங்கையை கை விட்டன .

தமிழ் இனத்தை அழித்த கொடியவனுக்கு தண்டனை வழங்கும் வரை ஓயமாட்டோம் .

கொடூரனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை .எண்ணுகிறான் வாழ் நாட்களை .

ஈழத் தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் வாங்கித் தராமல் ஓயாது  தமிழர் அலை
.

கருத்துகள்