சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


சென்னையில் ஒரு நாள் !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
இயக்கம் ஷாஹித் காதர் .
தயாரிப்பு ராதிகா சரத்குமார் .

உடல் தானம் பற்றி இந்திய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய உண்மை நிகழ்வான மூளைச் சாவு அடைந்த இதயேந்திரன் உடல் தான நிகழ்வை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் பாப்பி -சஞ்சய் இயக்கி வெற்றி கரமாக ஓடியது .பாப்பி -சஞ்சயின் உதவியாளர் ஷாஹித் காதர் இயக்கி உள்ளார் .இந்தபடத்தில் சேரன் சரத் குமார் ,சூர்யா ,ராதிகா ,பிரசன்னா ,விஜயகுமார் ,பிரகாஷ்ராஜ் ,கிட்டி ,சந்தான பாரதி, பார்வதி ,இனியா .அய்ஷ்வர்யா என்று நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர் .
 
இந்தப்படம் உடல்தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நல்ல படம் .பிரகாஷ்ராஜ் குடும்பத்தை சரியாக கவனிக்காத பிரபல நடிகராக நடித்துள்ளார் .அவர் மகள் தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள் .மனைவியாக ராதிகா நடித்துள்ளார் .இறுதிக் காட்சியில் பேசும் வசனத்தில் யாராக இருந்தாலும் ,எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் குடும்பத்திற்காக தினமும் சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் .வசனம் திரு .அஜயன் பாலா இது இவர்க்கு இரண்டாவது படம் நன்றாக வசனம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நடிகர் சூர்யா படத்தின் இறுதிக் காட்சியில் பேசும் உடல் தானம் பற்றிய வசங்கள் மிக நன்று  .வசனத்தில் ஆங்கிலச் சொற்கள் அதிகம் வருகிறது .இயக்குனர் கேட்டு இருக்கலாம் .இனி எழுதும் படங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள் .
வாய் பேசாத காது கேட்காத குழந்தைகளின் ஆசிரியை காதிலிக்கும் இளைஞன் கார்த்திக் .நேர்முகத் தேர்வில் வென்று வேலை கிடைத்து முதல் முறையாக பிரபல நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் )தொலைக்காட்சியில் நேர்முகம் காண நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் செல்கிறான் .ரவுடிகள் துரத்தி வர கார் ஒட்டி வந்த பெண் மோத கார்த்திக் வந்த வண்டி விபத்துஏற்படதலைக்கவசம் அணிந்து ஒட்டி வந்த  நண்பனுக்கு சிறு காயமும் ,தலைக்கவசம் இன்றி பின்புறம் அமர்ந்து வந்த கார்த்திக் மூளைச்சாவும் அடைகிறான் உயிர் இருக்கின்றது .நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் ) மகளுக்கு உடனடியாக  இதயம் மாற்ற வேண்டி உள்ளது . 


.கார்த்திக்கின் இதயத்தை தானமாக கேட்கும் போது கார்த்திக்கின் அப்பா மருத்துவராக இருந்தபோதும் தர மறுக்கிறார் .யாரோ  பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரோடு இருக்கும் என் மகனை கொல்ல  நான்  சம்மதிக்க மாட்டேன் என்கிறார். மந்திரி கேட்டபோதும் தர மறுக்கிறார் .பின் மகனின் காதலி வேண்டுகோளுக்கு இணங்க தர சம்மதிக்கிறார் .

சென்னையில் இருந்து வேலூர் கொண்டு செல்ல வேண்டும் 170கிலோ மீட்டர் தூரத்தை 1 1/2மணி நேரத்தில்  கடக்க  வேண்டும் .வானிலை காரணமாக ஹெலிகாப்ட்டர் வர இயலாது என்று சொன்னதும் ,காரில் கொண்டு செல்ல, போக்குவரத்து நிறுத்தி உதவி, காவல்துறை காரில் கொண்டு செல்ல உதவிட காவல் ஆணையாளர் சுந்தரபாண்டியனிடம்  (சரத் குமார் ) வேண்டுகிறார்கள் .முதலில் மறுக்கிறார் இயலாத காரியம் என்கிறார் .விஜயகுமார் தன்னம்பிக்கை தர சமதிக்கிறார் .கார் ஓட்டிச் செல்ல யார் ? தயார் என்று கேட்க்கும் பொது எல்லோரும் தயங்க  காவலர் சேரன் முன் வருகிறார் .

காவலர் சேரன் குடும்ப சூழ்நிலை காரணமாக லஞ்சம் வாங்கி பிடிபட்டு தற்காலிகமாக வேலை இழந்து மாமன்ற  உறுப்பினர் தயவால் வேலையில் சேர்ந்தவர் .லஞ்சம் வாங்கி பிடிபட்டு தன்  மீது பட்ட அவமானத்தை துடைக்க உயிரைப் பணயம் வைத்து காரை மிக வேகமாக ஒட்டி செல்கிறார் .மிக விறுவிறுப்பாக படமாக்கி உள்ளனர் .ஒளிப்பதிவு மிக நன்று .பின்னணி இசை நன்று .கடைசியில் குழந்தை காப்பாற்றப் படுகிறது. மருத்துவ்ராக வரும் பிரசன்னாவின் மனைவி இனியாவின் நடத்தையில் சந்திக்கப் பட்டு  அவள் மீது காரை ஏற்றி விடுகிறார் .தப்பித்து வந்தவரை சேரனுடன் இதயத்துடன் காரில் அனுப்புகின்றனர் .அவர் இடை வழியில் காரை வேறு பக்கம் ஓட்டச் சொல்லி நேரத்தை வீணாக்குகிறார் .பிறகு ராதிகா  செல்லில் பேசவும் மனம் மாறி கார் செல்ல உதவுகிறார் .

வெட்டுக் குத்து ,குத்துப்பாட்டு ,மசாலா ,சண்டை ,ஆபாசம்,வெளிநாடு பாடல் காட்சி இப்படி வழக்கமான தமிழ் திரைப்படத்தின் ஆடம்பரம்  இன்றி சமுதாயத்திற்கு உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் திரைப்படம் .படத்தில் நடித்த எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து மிக  நன்றாகவே நடித்து உள்ளனர் .
தமிழக காவல்துறை இந்தப்படத்திற்கு மிக நன்றாக ஒத்துழைப்பு  தந்துள்ளனர் .படம் .
தொடங்கும்போது எழுத்தில் நன்றி தெரிவித்து உள்ளனர். இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்து மூளைசசாவு ஏற்பட்டு விட்டால் 
உறுப்புதானம் தந்திட முன் வரவேண்டும் .தீயுக்கும் ,மண்ணுக்கும் இரையாகும் உறுப்பை மனிதனுக்கு வழங்குவதில் தவறு இல்லை .என்ற விழிப்புணர்வை மிக ஆழமாகவும்  அழுத்தமாகவும்  விதைத்து உள்ளது இந்தப்படம் .பாராட்டுக்கள் .ராடான்  டி .வி .தயாரிப்பாக வந்துள்ளது .நன்று .ராடான்  டி .வி .தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இதுபோன்ற நல்ல கருத்துக்களைச் சொல்ல முன் வர வேண்டும் 

கருத்துகள்