மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்
சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது
.வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர்
வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர்திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார்.

திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்  கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம்  விஸ்வநாதன் ,சந்துரு வாழ்த்துரை வழங்கினார்கள் .

திருச்சி .வெங்கடராமன் மகிழ்ச்சியே வாழ்க்கை என்ற தலைப்பில் தன்  முன்னேற்ற வாழ்வியல் பயிற்சி  அளித்தார் .நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் நல்லதை மட்டும் பார்ப்போம் ,நல்லதை மட்டும்  கேட்போம் ,நல்லதை மட்டும்  பேசுவோம் ,நல்லதை மட்டும் செய்வோம் என்று உறுதி மொழி எடுக்க வைத்தார் .காவல் நிலையம் ,நீதி மன்றம் ,மருத்துவமனை சென்றால் நிம்மதி  போய்  விடும்  .மூன்றுக்கும் முடிந்தவரை செல்லாமல் வாழ்வோம் .பலத்த காற்று அடித்தால் திரும்பி கண்ணில் படாமல் இமை மூடி கண்ணைப் பாதுகாப்பதைப் போல ,பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ..பயனுள்ள பல தகவல்கள் தந்து பயிற்சி அளித்தார்

.
.என் .ஜி .ஓ வைச் சேர்ந்த ராமநாதன் நன்றி கூறினார்
--

கருத்துகள்