ஹைக்கூ (சென்றியு ) கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ   (சென்றியு )  கவிஞர் இரா .இரவி !

நூற்றால் 
நூல் வராத பருத்தி 
செம்பருத்தி !





பேசிக்கொண்டன 
புரியவில்லை நமக்கு 
எறும்புகள் !

நினைவூட்டியது 
அவளை 
வானவில் !

காயம்பட்ட 
சோகம் இசைத்தது 
புல்லாங்குழல் !

மீனவரின் 
அட்சயப்பாத்திரம் 
கடல் !

நம்ப முடியவில்லை 
கண்ணால் கண்டும் 
ஆட்டை விழுங்கும் பாம்பு !

அரசியல்வாதிகளின் பொய் 
நூலாடையை 
பொன்னாடை !

சுடுகாட்டிலும் 
சிரித்தன 
மலர்கள் !

கிளைகளை விட 
நெடியது 
வேரின் பயணம் !

உருவம் மட்டுமல்ல 
சுவையும் பெரிது 
பலா !

வருத்தத்தில் குழந்தை 
குட்டிபோடவில்லை 
மயிலிறகு !

யாதும் ஊரே யாவரும்  கேளிர் 
மெய்ப்பித்தன 
அயல் நாட்டுப் பறவைகள் !

புதிய பொருளாதாரம் 
மலட்டு விதைகள் 
மலடாக்கியது நிலத்தை !

சிறுவனின் 
வண்டிச்சக்கரம் 
நுங்கு மட்டை !

பறித்த போதும் 
சிரித்தன 
மலர்கள் !

காணவில்லை கண்மாய் 
ஊரில் இல்லை ஊரணி 
உலகமயம் !

வருங்கால சந்ததிகளின் 
வளம் அழிக்கும் பகைவன் 
நெகிழி !

மரத்தை வெட்ட வெட்ட 
பொய்த்தது 
மழை !

ஆக்கிரமித்தது 
உலகனேரி 
மதுரை உயர்நீதிமன்றம் ! 
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்