ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ  ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

தோரண மாவிலை 
தோராயமாக பார்த்தது 
மாங்காய் !

குளத்தில் 
படகானது 
உதிர்ந்த இலை !

உழுது உதவியது 
உழவனுக்கு 
மண் புழு !

மலர் மீது 
வண்ண மலரா ?
ஓ வண்ணத்துப் பூச்சி !

ஆயிரம் தேனீக்களின் 
வாழ்க்கையை முடித்து 
ஒரு தீக்குச்சி !

சேற்றில் நட்ட நாற்று 
கதிர்களாய் விளைந்து  சிரித்தது 
உவகையில் உழவன் !

அறுவடைக்குப் பின்னும் 
தந்து உணவு பசுவுக்கு 
பூமி !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்