இளவரசனோடு முடியட்டும் ! கவிஞர் இரா .இரவி !



இளவரசனோடு முடியட்டும் !  கவிஞர் இரா .இரவி !

இளவரசன் கொலையோ ! தற்கொலையோ !
இரண்டுமே அவமானம் சமுதாயத்திற்கு !

இரண்டு காதலர்கள் இணைந்து வாழ்வதை 
இன்னும் எதிர்ப்பது மடமை !

கணினி யுகத்திலும் சிலர் இன்றும் 
காட்டுமிராண்டித்தனமாக நடப்பது  கொடுமை !

இளவரசனும் திவ்யாவும் சாதிகளை மறந்து 
இருவரும் உண்மையாக காதலித்தது உண்மை !

இருவரையும் பிரித்தது சாதிச்  சங்கங்களின் சதி !
இனி திரும்புமா ? இளவரசன் உயிர் தருவார்களா ?

உண்மை காதல் அல்ல நாடகம் என்று 
உரைத்தவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டது !

கொலையாக இருந்தால் இது 
காட்டுமிராண்டிகளின் கொடூர செயல் !

இளவரசன் தற்கொலையாக செய்து 
இருந்தால் அவசர செயல் இது !

திவ்யா முதல் நாள் உரைத்தது 
இளவரசனே என் இனிய கணவன் !

இளவரசன் இல்லத்தினர் அனைவரும் 
என்னிடம் அன்பாக இருந்தார்கள் !

என் அம்மாவின் சம்மதத்திற்காக 
என் வீட்டில் காத்து இருக்கிறேன் !

பெற்றோர்களும் இறந்து விடுவேன் என்று 
பெற்ற பிள்ளைகளை மிரட்டுவது கொடுமை !

மறுநாள் உரைத்தது வாழ மறுத்தது 
மனம் வலித்தது இளவரசனுக்கு !

சில நாளில் திவ்யாவின் மனம் 
சிறிதே மாறி இருக்கும் !

மாற்றம் ஒன்றுதானே மாறாதது 
மாற்றம் நிகழ்ந்து இருக்கும் !

இளவரசனே தற்கொலை என்றால் 
இன்னும் நீ வாழ்ந்து காட்டி இருக்கலாம் !

மனிதநேய ஆர்வலர்கள் எல்லோரின் 
மனதையும் ரணமாக்கியது உன் மரணம் !

கொலையாக இருந்தால் கொலை புரிந்த 
கொடூரன்கள் தண்டிக்கப்பட வேண்டும் !

பெரியார் பிறந்த மண்ணில் சாதி 
பேதைமை பார்ப்பது மடமை !

மனிதன் பகுத்தறிவைப் பயன்படுத்தினால் 
மண்ணில் கொலை தற்கொலை நிகழாது !

இனி ஒரு கௌரவக் கொலை 
எங்கும் நடைபெறக் கூ டாது !

காதல் தற்கொலைகளும் முட்டாள்தனம் 
காதலர்கள் வாழ்ந்து காட்டுவதே நன்று !


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்