குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

குழந்தைகள் குக்கூ   ... 
நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .மின் அஞ்சல் tharuvavairdeepan@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018.
விலை ரூபாய் 60.மின் அஞ்சல் minminihaiku@gmail.com

குழல்இனிது யாழ்இனிது  என்பதம் மக்கள் 
லைச்சொல் கேளா தவர் .  

ஒப்பற்ற திருக்குறளுக்கு விளக்கம் தரும் விதமாக குழந்தைகள் இலக்கியம் படைத்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . .இந்த நூலை ஆறிலிருந்து அறுபது வரை யாவரும் படிக்கலாம் .'ஓடி  விளையாடு பாப்பா ' என்று பாடிய மகாகவி பாரதியார்தான் முதன் முதலில் குக்கூ    கவிதைகளை தமிழில் அறிமுகம்  செய்தவர் .அவர் வழி நின்று இவரும் குக்கூ   கவிதை எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .அவர்கள் அரசுப்பணியில் , பரபரப்பான வட்டாட்சியர் பணி புரிந்துக் கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருவது பாராட்டுக்குரியது . சுட்டிப் பூங்கா என்ற ஹைக்கூ கவிதை நூலின் மூலம் பரவலானப்  பாராட்டைப்  பெற்ற கவிஞரின் அடுத்த படைப்பு இந்நூல் 

குயிலின் கூவலாக கவிதை வடித்துள்ளார் . எவ்வளவு கவலை , சோகம் நம்மிடையே இருந்தாலும்  குழந்தைகளின் சிரிப்பைக் கண்டால் கவலை , சோகம்  காணமல் போகும் .இந்த நூல் வாசிக்கும் வாசகர்களுக்கும் கவலை , சோகம் காணமல் போகும் .என்று உறுதி கூறலாம் 
.
அட்டை முதல் அட்டை வரை அனைத்தும் மிக நன்று .அச்சு ,வடிவமைப்பு  யாவும் மிக நன்று .குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பாவின் திருமகள் நா .தேவி நாச்சியப்பன் அவர்களின் வாழ்த்துரை மிக நன்று .இந்த நூலை  வடிவமைத்து , வாழ்த்துரை வழங்கி வெளியிட்டு உள்ள மின்மினி இதழ் ஆசிரியரும்  , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி  கவிஞர் கன்னிகோயில் இராஜாவின் கை வண்ணம் நூல் ஆசிரியரின் கவிதைகளுக்குச் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன .குழந்தைகளின் புகைப்படங்கள் கவிதைகளுக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக உள்ளன .

நூலில் உள்ள அனைத்து குக்கூ   கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .


படபடக்கும் 
குழந்தைகளின் 
இமைகள் 
தெரித்து 
விழும் 
ஹைக்கூப் பூக்கள்  !

நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்களின் ஹைக்கூப்  பார்வை மிக நன்று .

குழந்தைகள் விளையாடுவதை ரசித்து மகிழலாம் .குழந்தைகளோடு விளையாடினால் குழந்தைகளாகவே  மாறி விடலாம் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

குழந்தை 
விளையாடும்போது 
ஆனந்தம் 
குழந்தைகளோடு 
விளையாடும்போது  
பேரானந்தம் !

நிலாவை எல்லாக் கவிஞர்களும் பாடி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்கள் வித்தியாசமாக பாடி உள்ளார் .பாருங்கள் .

தெருக்கள் தோறும் 
நிலாக்கள் 
விளையாடும் அதிசயம் 
குழந்தைகள் !

பணம் கூடக் கூட நடிகையின் ஆடை குறையும் அவலத்தை சுட்டும் விதமாக உள்ள கவிதை நன்று .

அரை குறை ஆடையில்
முகம் சுளிக்க வைத்தபடி 
நடிகை !
முழுமையான நிருவாணத்தில் 
அழகாக குழந்தை !

பெற்றோர்கள் பலர் குழந்தைகளை விளையாடுவதற்கு அனுமதிப்பதே இல்லை .குறிப்பாக அடுககங்களில் வாழும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்பும் இல்லை .

விரட்டாதீர்கள் 
விளையாடவரும் 
விளையாட்டுக்களை 
அனுமதியுங்கள் 
குழந்தைளோடு விளையாட !

பலூன் கண்டதும் பரவசம் அடையும் குழந்தைகளின்  மனதைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .

விரிந்து கொள்கிறது  
பலூன்களை ஊதும்போது 
குழந்தைகளின் மனங்களும் !

அரும்புகளின் குறும்புகள் பார்த்திட அழகோ அழகு !அதனை உணர்த்தும் கவிதை ஒன்று .மிக நன்று .

குதூகலமாய்க் 
கும்மாளம் போட்டுக் கொள்கின்றன 
குறும்புகள் 
குழந்தைகளிடத்தில் !

படிக்கும்  வாசகர்கள் மனதில் குழந்தைகளைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளார் .

தவழும் தண்ணீர் 
குளிக்கும் குழந்தை 
சுத்தமாகிக் கொள்ளும் 
நதி !

நிலாவே குழந்தைகளைத் தேடுமாம் நூல் ஆசிரியர் கற்பனை மிக நன்று .

வீடுதோறும் 
முற்றங்க்ளைத் தேடுகிறது 
நிலா !
குழந்தைகளுக்குப் 
பால்சோறு படைக்க !

பல  குடும்பங்கள் கிராமம் விட்டு நகரத்திற்கு நகர்ந்து விட்ட காரணத்தால் , நகரத்து வீட்டில் தாத்தா பாட்டி இருப்பது இல்லை .குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாரும் இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கிராமத்து 
வீட்டுத் திண்ணையில் 
நசுங்கிக் கிடக்கும் 
ஏராளமான கதைகள் 
குழந்தைகளுக்காக !

கடலையும் குழந்தையையும்  வாசகர்களுக்கு காட்சிப் படுத்தும் கவிதை நன்று .

கால்களை  
நனைத்துக் கொள்ள 
குழந்தைகள் வருகையில் 
களிப்படைந்து விடுகிறது கடல் !

குழந்தைகள் காலையில் கண் விழித்தவுடனேயே சுறுசுறுப்பாகி விடுவார்கள் .அவர்களை ரசித்தால் நமக்கும் சுறுசுறுப்பு வந்து விடும் .

படுக்கையிலிருந்து 
குழந்தை எழுகையில் 
விழித்துக் கொள்கின்றன 
விளையாட்டுகள் !

இப்படி நூல் முழுவதும் குழந்தைகள் !குழந்தைகள் !குழந்தைகள் ! தவிர வேறு இல்லை என்று சொல்லும் அளவிற்கு குழந்தை இலக்கியம் படைத்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன்அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் 

.



-- 

.

கருத்துகள்