படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !

படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி !  மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !

ஓவியம் வரையும்  ரங்கராஜன் என்ற பெயரை !
ஓவியர் மாலிபோல வர வாலி என்று வைத்தார் பாபு !

ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிடடாலும் !
கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி ! 

திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்தவாலி! 
திருவரங்கத்திற்குப்  பெருமைகள் சேர்த்த வாலி !

மயக்கமா! கலக்கமா ! கவியரசு பாடல் கேட்டு வாலி! 
மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி ! 

சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி !
சொக்க வைக்கும் பாடல்களின் ஆசிரியர் வாலி !

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி !
பல்லாண்டுகளாய் திரையில் நிலைத்த நின்ற வாலி !

வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி !
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம் .ஜி .ஆர் !

உன் பெயர் பெயர் இடம் பெறாது என்றதும் வாலி !
உலகம் சுற்றும் பன் என்று பெயர் மாற்றவேண்டும் !

உங்களுக்குச் சம்மதமா என்று கேட்ட வாலி !
உடன் சிரித்து  ரசித்த உயர்ந்த மனிதர் எம் .ஜி .ஆர் .!

எம் .ஜி .ஆருக்கு நான் ஆணையிட்டால் என்று  எழுதி! 
எம் .ஜி.ஆரை ஆணையிடும் பதவிக்கு வர வைத்த வாலி!

மல்லிகை என் மன்னன  மயங்கும் என்று  எழுதி !
மதுரை மல்லிக்கு மங்காப் புகழ் சேர்த்த வாலி !

தனி ஈழத்திற்காகவும் கவிதைகள் வடித்த வாலி !
தனிக் கவிதைகளிலும் முத்திரைப் பதித்த வாலி ! 

பாடல் கவிதை கதை கட்டுரை வடித்த  கவிஞர் வாலி !
படைப்புகளில் என்றும் வாழ்வார் மரணம் இல்லை !

ஓய்வறியா உழைப்பாளி உரத்த சிந்தனையாளர் வாலி !
ஒப்பற்ற கவிதைளை வடித்துத்  தந்தவர் வாலி !

கவியரங்கங்களில்  தலைமை வகித்தவர் வாலி !
கை தட்டல்களைப் பரிசாகப்  பெற்றவர் வாலி !

கண்ணதாசனை தாடி இல்லா தாகூர் என்றார் வாலி !
கற்பனைக் கவியால் தாடி உள்ள  தாகூர் ஆனார் வாலி !

கண்ணதாசனை  மீசை இல்லா பாரதி என்றார் வாலி !
கற்க்கண்டுக் கவியால் மீசை உள்ள பாரதியானார்வாலி! 

படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி !  மரணம் இல்லை ! மரணம் இல்லை ! மரணம் இல்லை ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

  1. ஆழ்ந்த இரங்கல்கள்...

    வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம்...!
    அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்...!
    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா...?
    அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியமா...?

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!

    பதிலளிநீக்கு
  2. நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.blogspot.com
    http://www.tamilthottam.in/f16-forum
    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    http://www.noolulagam.com/product/?pid=6802#response*

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க
    கண் தானம் !



    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக