பாசமலர் திரைப்படம் புதிய தொழில் நுட்பத்துடன் வெளிவந்துள்ளது !



பாசமலர் திரைப்படம் புதிய தொழில் நுட்பத்துடன் வெளிவந்துள்ளது !

பாசமலர் திரைப்படம் புதிய தொழில் நுட்பத்துடன் வெளிவந்துள்ளது  .பார்த்து மகிழுங்கள் .செவாலியர் சிவாஜி நடிக்காமல் அண்ணனாக வாழ்ந்த படம் .சிறந்த நடிகை சாவித்திரி நடிக்காமல் தங்கையாக வாழ்ந்த படம் .ஜெமினி கணேசன் சிறப்பாக நடித்த படம் திரு பீம்சிங் இயக்கத்தில் வந்த படம் .கவியரசு கண்ணதாசன் வைர வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ,இராம மூர்த்தி இசையமைத்த படம் .பாசத்தால் பலரை கண் கலங்க வைத்த படம் .திரை காவியம் பாருங்கள் .

பாடல் வரிகள் 

.
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக
மலர்களிரண்டு விழியாக
மயங்கவைத்தாளோ…
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ..
முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழை மேக சித்திரமோ
முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நினைவில் மயங்கும் இருளானாள்
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ

(ஆனந்தா….. நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்
அதுல ஆனந்த கண்ணீரை தான் நான் எப்பவும் பாக்கணும்
அது என் கடமை … நீ கவலை படாதே
நன்றி ஆனந்தா மிக்க நன்றி…
அம்மா மஞ்சள் குங்குமத்தோட
நீ நீடூழி வாழணும் தாயே….)
வாராயென் தோழி வாராயோ… மணப்பந்தல் காண வாராயோ
வாராயென் தோழி வாராயோ… மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ…
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ..
.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

கூடொன்று கண்டேன் குயில் வர கண்டேன்
குரலால் அழைக்கவில்லை ஹோய்
குரலால் அழைக்கவில்லை
ஏடொன்று கண்டேன் எழுதிட கண்டேன்
நான் அதை எழுதவில்லை ஹோய்
நான் அதை எழுதவில்லை
குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார்
நான் அதை சொல்லவில்லை….
நான் அதை சொல்லவில்லை

( ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர் கண்ணாலே…)

பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை

நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்
சிரித்தார் பேசவில்லை…ஹோய்
சிரித்தார் பேசவில்லை
அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்
சிரித்தேன் காணவில்லை….ஹோய்
சிரித்தேன் காணவில்லை
இருவர் நினைவும் மயங்கியதாலே யாரோடும் பேசவில்லை
யாரோடும் பேசவில்லை


பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை…ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
மயங்குகிறாள் ஒரு மாது…
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே……
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான்
என்றால் நெஞ்சம் உருகாதா
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான்
என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
தோழியர் கதை சொல்லி தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
தோழியர் கதை சொல்லி தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படிதவள் தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சேவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சேவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆள பிறந்தாயடா… புவி ஆள பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழ பிறந்தாயடா…. வாழ பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு……..
இளமை வழி கண்டு………
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழ பிறந்தாயடா……..
 தங்க கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்….. பொருள் தந்து
மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்…. உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான…….
மங்கை உனக்காக…..
உலகை விலை பேசுவார்…….
நதியில் விளையாடி கொடியின் தலை சேவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்