ஹைக்கூ ( சென்ரியூ )கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ( சென்ரியூ  )கவிஞர் இரா .இரவி  !

பசித்தாலும் புல்  உண்ணாது 
பசிக்காமல் மானை உண்ணாது 
புலி !

உண்பது பச்சைப்புல் 
தருவது வெள்ளைப்பால் 
பசு !

நன்றிக்கு இலக்கணம் 
திருடனின் சிம்மசொப்பனம் 
நாய் !

நிறம் கருமை 
குரல் இனிமை 
குயில் !

மேகம் கண்டதும் 
தேகம் சிலர்க்கும் 
மயில் !

சமாதானச் சின்னம் 
சந்தோசப்படும் வானம் 
புறா !

இழுத்துச் சென்றது 
பன்மடங்கு எடை
எறும்பு !

தண்டவாளமின்றி 
பயணமானது ரயில் 
ரயில் பூச்சி !

கண்டதும் காணமல் 
போனது கவலை 
வண்ணத்துப்பூச்சி !

கற்பித்தது 
விடாமுயற்சி 
எட்டுக்கால் பூச்சி !



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்