மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !


மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்    பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் 
பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்
.எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். ஒருங்கினைப்பாளார் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .

திருவாளர்கள் C.ராஜேந்திரன் , சரவணன், ஆ . முத்து  கிருஷ்ணன்  வாழ்த்துரை வழங்கினார்கள்கவிஞர்கள் ,கே .விஸ்வநாதன் தன்னம்பிக்கை  கவிதைவாசித்தார் 

  மனித வள மேம்பாடு  அதிகாரி  திருமதி M. உமாராணி M.S.C.அவர்கள் ஆடு கொண்டாடு என்ற தலைப்பில் தன்  முன்னேற்றப் பயற்சி அளித்தார் .கோபம் குறைத்தால் வாழ்க்கை செழிக்கும் .கோபம் குறைக்க வழிகள் சொல்லி விளக்கமாக பயற்சி அளித்தார்.திருமதி M. உமாராணி அவர்களின் புதல்வி தன்னம்பிக்கை  கவிதைவாசித்தார் .

 இலக்கியப் பயணமாக அமெரிக்கா ,கனடா   நாடுகளுக்கு சென்று திரும்பிய  கவிதை உறவு ஆசிரியர் கலைமாமனி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது .அவர் ஏற்புரையில் சினம் காக்க என்று பல ஆலோசனைகள் வழங்கினார் .
  திரு தினேஷ்  நன்றி கூறினார் .ரெ  .கார்த்திகேயன் உள்ளிட்ட மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர்  கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
-- 

-- 

கருத்துகள்