பள்ளத்திலுள்ள வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் தேவதேவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பள்ளத்திலுள்ள   வீடு !

நூல் ஆசிரியர் கவிஞர் தேவதேவன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
 

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட், அம்பத்தூர் ,சென்னை .600098.தொலைபேசி 044- 26359906.
விலை ரூபாய் 65. 

நூலின்  அட்டைப்படம் வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன . நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் நிறுவனத்தின் பத்ப்பாக வந்துள்ளது .வார்தை  இதழில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் தேவதேவன்.

இவரது கவிதைகள் படிக்கும் வாசகர்களுக்கு புரியும்படி உள்ளன .சிலர் கவிதை என்ற பெயரில் புரியாத புதிர்களை எழுதி வருகின்றனர் .
நூலில் உள்ள கவிதைகளில்  பதச்சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு .

உதிர்ந்த இலையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து காட்டுகின்றார் .

உதிர்ந்த இலை !

நாளும் பொழுதும் நனைந்தபடியே 
மூழ்கி  மூழ்கித் திளைத்து  
மண்ணுக்கு உரமாகையிலும் சரி 
கண்ணீரும் உறிஞ்சப்பட்டு விடும் 
நீரற்ற வெளியினில் 
பற்றி எரிந்து 
விண்ணிற் கலந்து விடுகையிலும் சரி 
நீர்மல்க வைக்கும் 
நன்யை நினைவுகளாகவே 
மறைந்துவிடத் துடிக்கிறாய் !

மலர் கிளை பிரிந்தாலும் வருந்துவதில்லை .மனிதர்களே பிரிவுக்காக வருந்தாதீர்கள் என்று உணர்த்தும் கவிதை . 

கிளை பிரிந்த மலர் !
கிளை பிரிந்த மலர்
வாடுவதில்லை 
காதலறிவார் கைகளில் ! 

பல கவிதைகளில் மலர்கள் பற்றியே எழுதி உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிஞர் தேவதேவன் அவர்கள் இயற்கை நேசர் என்பதை உணர முடிகின்றது .

அழகின் ரகசியங்கள் !

வீழும்  மலர்கள் 
காயமடைவதில்லை 
காயப்படுத்துவதுமில்லை   
தனது சொந்த அழகும் மனமும் 
பெருமிதமும் தவிர !

இயற்கைக் காட்சிகளை நூல் படிக்கும் வாசகர்களுக்கு காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் .

நீரோடு மீன்களும் !

நீரோடு மீன்களும் 
மண்ணோடு வேர்களும் 
விண்ணோடு மரங்களும் 
இருளோடு விண்மீன்களும் 
ஆன்று குலவும் மொழியாய் 
மவுனம் ஒலி  செய்யும் நின் குரல் ! 
கருவண்டுகள் 
மடிந்து கிடக்கும் 
மலர் விரிப்பாய் 
நின் பார்வை ! 

இயற்கைக்கும் உயிர் உண்டு .உணர்வு உண்டு .இயற்கை பேசாது என்கிறோம் .ஆனால் பேசும் என்கிறார் .உற்று நோக்கினால் பேசுவது கேட்கும் .அதற்கு பொறுமையும் ஈடுபாடும் தேவை .

சொற்களால் !
சொற்களால் முடியாததையெல்லாம் 
சொல்லிக் கொண்டிருக்கிறது   
இயற்கை !
.
நூலில் பெரும்பாலான கவிதைகள் இயற்கை பற்றி அழகியலாக உள்ளன .பாராட்டுக்கள் .இயற்கையை ரசிப்பதும் ஒரு கலை .அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை .நூல் ஆசிரியர் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது .இயற்கையை ரசித்து ருசித்து கவிதைகள் எழுதி உள்ளார் .

மனிதர்களில்  சிலர் மனம் விட்டு பேசுவதில்லை .மனதில் உள்ள கருத்தை  வெளிபடுத்துவதில் தயக்கம் .இந்த தயக்கத்தின் காரணமாகவே வாழ்வில் பல இழப்புகளை சந்தித்து வருகின்றனர் .மன அச்சம் உணர்த்தும் கவிதை ஒன்று .மிக நன்று .

ஒரு புதிய நாள் காலை !

அவன் வெளியே கிளம்பினான் 
ஆடைகளை மிக நேர்த்தியாய் 
அணிந்து கொண்டு 
நெடியதொரு மவுனம் முறிந்து 
மனிதர்களை நெருங்கிப்  
பேச விரும்பினான் 
மீண்டும் தோற்றான் 
மீண்டும் மீண்டும் !
 
நூல் ஆசிரியர் கவிஞர் தேவதேவன் கவிதைக்கண்ணில் அடிக்கடி மலர்கள் படுவதால் மலர்கள் பற்றியே பல கவிதைகள் நூலில் உள்ளன .
ஒளியில் !

ஒளியில் 
மிளிர்கின்றன 
உதிர்ந்த  பூக்களும் !

அழகியல் சார்ந்த கவிதைகளின் அணி வகுப்பு . நந்தவனத்தில்  இனிய உலா சென்று வந்த உணர்வு .பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

கருத்துகள்