தன்மானத் தமிழன் பிறந்த நாள் ! கவிஞர் இரா .இரவி !

தன்மானத் தமிழன் பிறந்த நாள் !  கவிஞர் இரா .இரவி !

உன்னுடைய பிறந்த நாள் என்பது !
ஒடுக்கப் பட்டவர்களின் உரிமை நாள் !

தம்பி என்று இன்று ஒலித்தாலே போதும்
தரணி முழுவதும் அறியும் உன்னை ! 

தம்பி என்ற தமிழ்ச் சொல்லிற்கு இன்று
தன்னிகரில்லாப் பெருமை வந்தது !

விடுதலைக் காற்றைச்  சுவாசிக்க வைக்க 
வேங்கைகளை உருவாக்கிய வீரன் நீ !

கடவுளை வணங்காத நாத்திகர்களும்
கடவுளாக வணங்கிடும் வீரன் நீ !

ஏன் ? என்றால் சிறைவாசம் என்றிருந்தபோது 
ஏன் ? என்று தட்டிக் கேட்ட வீரன் நீ !

தமிழன் கறி கிடைக்குமென்ற சிங்களனுக்கு
தலையில் தட்டி  அறிவு புகட்டிவவன் நீ !

பாலியல் வன்முறை புரிந்த சிங்களனுக்கு
பாடம் புகட்டி பயம் காட்டியவன் நீ !

சிங்கள இராணுவத்தின் அராஜக
சின்னப் புத்திக்கு வேட்டு வைத்தவன் நீ !

வாலாட்டி வந்த சிங்கள மந்திகளின்
வாலை ஒட்ட  நறுக்கியவன்   நீ !

கொட்டக் கொட்டக் குனிந்த தமிழருக்கு
கொட்டும் கரம் முறிக்கக் கற்றுத்  தந்தவன் நீ !

ஆதிக்க சக்திகள் அடிமைப் படுத்தியபோது
அடங்க மறுத்து அத்து மீறியவன் நீ !

அடவடியான  அயோக்கியர்களிடம் சரிவராது
அகிம்சை வழி உணர்த்தியவன் நீ !

வான் வழிப்   படைகள்  அமைத்து
வாய்ச்சொல் வீரர்களின் வாயடைத்தவன் நீ  !

முப்படைகள் நிறுவி ஆட்சி நடத்தி
முத்தமிழை வளர்த்து வந்தவன் நீ !

தமிழர்களுக்கு பொற்க்கால ஆட்சியை
தமிழ் ஈழத்தில் தந்த மன்னவன் நீ !

தமிழர்களின் வீரத்தை பெருமையை
தரணிக்கு பறைசாற்றியவன் நீ !

தன் மக்களுக்காக தன்னலமாக வாழாமல்
தமிழ் மக்களுக்காக வாழ்ந்து வருபவன் நீ!

குடும்பத்தை என்றும் பெரிதாக எண்ணாமல்
குடும்பமாக தமிழ் இனத்தை எண்ணுபவன் நீ !

மக்களுக்காக தன் மக்களை இழந்தாய்
மக்களுக்காகவே வாழ்ந்து வருகின்றாய் நீ !

பதவி ஆசைகள் பலர் காட்டியபோதும்
பல் இளிக்காத கொள்கையாளன் நீ !

பணத்தாசைகள் சிலர் காட்டியபோதும்
பண்பு மாறாத அன்பாளன் நீ !

மிரட்டல்களுக்கு என்றும்  அஞ்சாமல்
முடிந்தமட்டும் மோதிய வீரத்திலகம் நீ !

உலக அளவில் தமிழன் என்றால் வீரன் என்று
உணர்த்தி பகைவர்களுக்கு அச்சம் தந்தவன் நீ !

கொண்ட கொள்கையில் குன்றாக நின்று
குடிகொண்டாய் தமிழர்களின் உள்ளங்களில் நீ !

எட்டு நாடுகளின் படைகளை துணிவுடன்
எதிர்த்து நின்ற புறநாநூற்றுத்தமிழன் நீ !

காட்டிக் கொடுத்த கருணாவால் வந்தது துன்பம்
குறுக்கு வழியில் சதி செய்தது வெற்றியன்று !


இறந்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள்
உலகத்தமிழர்கள் உள்ளங்களில் வாழ்கிறாய் நீ !

புரட்சியாளர்கள் என்றுமே சாவதில்லை
புரியவில்லை இன்றும் சிலருக்கு !

இன்று இல்லாவிட்டாலும் நாளை
ஈழம் மலரும் யாராலும் தடுக்க முடியாது !

ஈழத்தின் ஒவ்வொரு துகள் மண்ணும்
இனியவன் உன் பெயர் சொல்லும் !

கருத்துகள்