மகாகவி பாரதி கண்ட விடுதலை ! கவிஞர் இரா .இரவி !

மகாகவி பாரதி கண்ட விடுதலை !  கவிஞர் இரா .இரவி !

அடையும் முன்பே அடிந்து விட்டோம் என்று !
அன்றே ஆனந்த கூத்தாடியவன் பாரதி !

இன்று இங்கு  இருந்திருந்தால் பாரதி !
ஏன் ? பெற்றோம் என்று நொந்து இருப்பான் !

வெள்ளையனே வெளியேறு என்றான் அவன் !
வெள்ளையனே கொளையடிக்க வருக ! என்றானது !

பன்னாட்டு நிறுவனங்கள் வேண்டாம் என்றான் அன்று !
பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளைகள்  இன்று !
 
குடிக்கும் தண்ணீர் பொதுவாக இருந்தது அன்று !
குடிக்கும் தண்ணீர் விலைக்கு விற்கின்றனர் இன்று !

மலைகளை ரசித்துப் பாடல் பாடினான் அன்று !
மலைகளை வெட்டி பல நாடுகள்  கடத்தினர் இன்று !

சிட்டுக் குருவிகளுக்கு அரிசியிட்டு மகிழ்ந்தான் அன்று !
சிட்டுக் குருவிகளைக் கூண்டோடு  ஒழித்தனர் இன்று !

ஆறுகளையும் மணல்களையும் பாடினான் அன்று !
ஆறுகளையும் மணல்களையும் காணவில்லை இன்று !

பெண் விடுதலை வேண்டும் உரக்கப் பாடினாய் அன்று !
பெண் உயிர் எடுத்து விடுதலை தருகின்றனர் இன்று !

அடிமை விலங்கை அடித்து நொறுக்கினான் அன்று !
அடிமை விலங்கை வாங்கிப் பூட்டினர் இன்று !

காக்கை குருவி எங்கள் சாதி என்றான் அன்று !
காக்கை  போல தமிழரைச் சுடுகிறான் இன்று !

சேதுவை மேடாக்கி பாலம் கட்டப் பாடினான் அன்று !
சேது கடல் திட்டத்தையே கை கழுவினர் இன்று !

தமிழ்மொழி  இனிய மொழி  என்றான் அன்று !
தமிழ்க்கொலை  நடக்கிறது ஊடகத்தில் இன்று !

உயிருக்கு மேலாக தமிழை நேசித்தான் அன்று !
உயிர்கள் போனது ஈழத்தில் தமிழால் இன்று !

இந்தியாவை இந்தியர் ஆள விரும்பினான் அன்று !
இந்தியாவை வல்லரசுகள் ஆள்கின்றனர் இன்று !

இந்தியாவே முடிவுகள் எடுக்க விரும்பினான் அன்று !
இந்திய அமைச்சரை அமெரிக்கா முடிவு செய்கிறது இன்று !

காணி நிலம் வேண்டும்   என்று பாடினான் அன்று !
காணி நிலம் எங்கும்  கெயில் குழாய் பதிக்கின்றனர்  இன்று !
.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை என்றான் அன்று !
உழவும் தொழிலும் சிதைந்து வழக்கொழிந்தது இன்று !

பஞ்சம் பட்டினி ஒழிய வேண்டும் என்றான் அன்று !
பஞ்சம் பட்டினி தலை விரித்து ஆடுகின்றது இன்று !

அச்சமில்லை  அச்சமில்லை என்று பாடினான் அன்று !
அச்சமின்றி  யாருமில்லை என்றானது இன்று !

புதிய ஆத்திச்சூடி பாடி புத்துணர்வு தந்தான் அன்று !
புதிய தலைமுறை ஆத்திச்சூடி அறியவில்லை இன்று !

திருவள்ளுவரை உலகிற்கு தந்த தமிழ்நாடு என்றான் அன்று !
திருக்குறளை தேசிய நூலாக்க மறுக்கின்றனர்  இன்று !

கவிதை எழுதியபடி கவிதையாகவே  வாழ்ந்தான்  அன்று  !
கவிதை எழுதுவோர் எழுதியபடி வாழவில்லை இன்று !

அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினாய் அன்று !
அன்பு என்றால் என்னவென்றுதெரியவில்லை இன்று !

மகாகவி பாரதி கண்ட விடுதலை இது இல்லை !
மகாகவி பாரதி இருந்தால் நொந்து இருப்பான் உண்மை !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்