ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ   ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !


கடலில் கலந்த நதியை
ஆவியாக்கிப் பிரித்தான் 
ஆதவன் !

வந்தாரை வளமாக வாழவைத்து 
வாழ வழியின்றி 
புலம்பெயரும் தமிழன் !

நான் எழுதிய 
முதல் கவிதை 
அவள் பெயர் !

பிறப்பு முதல் இறப்பு வரை 
மறக்க முடியா உறவு 
அம்மா !

உயிரில் கலந்த 
மெய் 
அம்மா !

இன்று இருப்பார் 
நாளை இருப்பதில்லை 
அரசியல்  கூட்டணி !

மக்களாட்சி என்ற பெயரில் 
தொடரும் மன்னராட்சி 
இந்தியா !

அரசியல்வாதிகளின் 
தேசிய விளையாட்டு 
ஊழல் !

அரசியல்வாதிகளின் 
தேசிய கீதம் 
காசு பணம் துட்டு !

தேர்ந்தெடுத்தனர் 
குறைந்தபட்ச கெட்டவரை
தேர்தல் !

யார் ஆண்டாலும் 
இறங்குவதில்லை 
விலைவாசி !

கருத்துகள்