தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை 100 வது மாத தன் முன்னேற்றப் பயிலரங்கம் ! .

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை 100 வது  மாத தன் முன்னேற்றப் பயிலரங்கம் ! . 


தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை 100 மாத தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது . 
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .இராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்துத் தொகுப்புரையாற்றினார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை உரையாற்றினார் .100 வது மாதசிறப்பு  விழா என்பதால் ,மாணவ மாணவியரின் மாறு வேடப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி நடந்தது .

மாறுவேடப் போட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் ,காந்தியடிகள், கிருஷ்ணன் ,இராதை ,தேவதை, சீமாட்டி வேடம் அணிந்து வந்தனர். பங்குப் பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெகணேசன் செய்து இருந்தார். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,விஸ்வநாதன் , வைர காந்தன் ஆகியோர் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,ஆ .முத்துக் கிருஷ்ணன் ,G.ராமமூர்த்தி , C.ராஜேந்திரன், சரவணன் ,ஜானகி ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

பட்டிமன்றப் புகழ் கவிஞர் மூரா " முயலும் ஆமையும்" என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .குழந்தைகளிடம் அன்பு செலுத்த வேண்டிய அவசியத்தையும் ,எதிர்மறை சொற்களைப் பயன்படுத்தாமல் ,நேர்மறை சொற்களையே பயன்படுத்தி ஊக்கம் தந்து வளர்க்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்  கூறி தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .மாணவ மாணவியரின் பெற்றோர்களும்,  சம்பத் ,கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .திரு. தினேஷ் நன்றி  கூறினார்  .
-- 

கருத்துகள்