பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !


பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !

உழைப்பைப் போற்றும் பொன் நாள் !
உலகம் போற்றும் நன் நாள் !

நெல் விளைந்த பூமிக்கும் !
நெல் விளைவித்த கதிரவனுக்கும் !

உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும் !
உன்னத நன்றி சொல்லும் திருநாள் !


நன்றியை இயற்கைக்கே சொல்பவன் !
நன்றியை மறக்காதவன் தமிழன் !

உலகின் முதல் மொழி தமிழ் !
உலகின் முதல் மனிதன் தமிழன் !

உலக மொழிகளின் தாய் தமிழ் !
உலக மனிதர்களின் முதல்வன் தமிழன் !

உலகிற்கு பண்பாடு பயிற்றுவித்தவன் தமிழன் !
உலகிற்கு ஒழுக்கம் ஓதியவன் தமிழன் !

உலகிற்கு விவசாயம் கற்பித்தவன் தமிழன் !
உலகிற்கு பொதுமறை தந்தவன் தமிழன் !

உலகிற்கு முன் மாதிரியானவன் தமிழன் !
உலகின் முதல் அணைக்கட்டு கட்டியவன் தமிழன் !


கட்டிடக் கலையில் நுட்பம் விதைத்தவன் தமிழன் !
கல்லில் கலை வண்ணம் கண்டவன் தமிழன் !

கடல் தாண்டி சென்று வணிகம் செய்தவன் தமிழன் !
கடலில் மூழ்கி முத்து எடுத்தவன் தமிழன் !

அன்றே முப்படை அமைத்தவன் தமிழன் !
நன்றே முத்தமிழ் வளர்த்தவன் தமிழன் !

உலகில் வீரத்தை விதைத்தவன் தமிழன் !
உலகிற்கு உழைப்பை கற்பித்தவன்  தமிழன் !

உலகில் பெரியகோயில் கட்டியவன் தமிழன் !
உலகில் நிகரில்லா திறமைக்காரன் தமிழன் !

தமிழனாகப் பிறந்ததற்குப் பெருமை கொள்வோம் !
தமிழர் திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்