முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் பெற்றோர் சதாபிசேகம் திருமண விழா !


முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் பெற்றோர் சதாபிசேகம் திருமண விழா !

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் பெற்றோர் ப்ரும்மஸ்ரீ  .அ வெங்கடாசலம் ,சௌபாக்கியவதி
 மா .பேபி சரோஜா      சதாபிசேகம் திருமண விழாதிருமண விழா 8.5.2014 அன்று   சேலத்தில் சாரதா கல்லூரி  சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மன்றத்தில் நடைபெற்றது .

கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்
  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்  ,கோடை பன்பலை பொறுப்பாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் ,தி இந்து மண்டல மேலாளர் முரளிதரன் ,உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர்   முனைவர் க .பசும்பொன் ,பேராசிரியர்கள் பெர்னாட்ஷா  ,திரு& திருமதி  நம் சீனிவாசன் ,, தணிக்கையாளர்கள் சண்முக சுந்தரம் ,சஞ்சீவி ராஜன் B.S.N.L. முனைவர் நேரு ,  N.C.B.H.மண்டல மேலாளர் கிருஷ்ணா முர்த்தி, தாசில்தார் ( ஒய்வு ) அழகர்சாமி ,உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி அனைவரும்மதுரையில் இருந்து  சேலம் சென்று விழாவில் கலந்து வந்தோம் .

.தி இந்து திரு அண்ணாமலை ,நடிகர் வடிவுக்கரசி ,திருமதி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல் முக்கிய பிரமுகர்கள் சென்னையில் இருந்து சேலம் வந்து சிறப்பித்தனர் .
விழா மிக எளிமையாகவும் இனிமையாகவும் சிறப்பாகவும் நடந்தது .

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் வருகை தந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உணவு சாப்பிட வைத்து உபசரித்து வழியனுப்பி வைத்தார்கள் .

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள்  குடும்பத்தினர் அனைவரும் பங்குபெற்று சிறப்பித்தனர் .விழா அழைப்பிதழிலும் ,தாம்புல பையிலும்  யாருடைய படிப்பும் அச்சிடவில்லை  . அரிய பட்டமான   இ .ஆ .ப . கூட  அச்சிடவில்லை  . சிலர் சாதாரண பட்டம் பெற்று பெரிய எழுத்தில் போடுவதும் ,பட்டம் போட விடுபட்டால் சண்டை போடுவதும் என் நினைவிற்கு வந்தது .

கருத்துகள்