10 ஆம் வகுப்பு ,12 ஆம்வகுப்பு அரசுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவியர் மாணவருக்கு பாராட்டு விழா !

10 ஆம் வகுப்பு ,12 ஆம்வகுப்பு அரசுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவியர்  மாணவருக்கு பாராட்டு விழா !


ஜே .சி .ஐ. மதுரை எக்செல் , நிலா சேவை மைய அறகட்டளை இணைந்து 10 ஆம் வகுப்பு ,12 ஆம்வகுப்பு அரசுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவியர்  , மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது .

விழாவிற்கு புரட்சிக் கவிஞர் மன்றதின் தலைவர் 
பி .வரதராசன் தலைமை வகித்தார் .முத்தமிழ் அறக்கட்டளை  திருச்சி  சந்தர் ,கவிஞர் இரா .இரவி ,.ஜே .சி .ஐ.ரித்தீஷ்  . முன்னிலை வகித்தனர் .கவிக்குயில் இரா .கணேசன் வரவேற்று தொகுப்புரையாற்றினார்.தாய் தனிப் பயிற்சி நிலையத்தில் படித்து அதிகம் மதிப்பெண் பெற்றனர்.

காவல்துறை உதவி ஆணையர் முனைவர் கவிஞர் 
ஆ .மணிவண்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார்.  "ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் . 1/2 மதிப்பெண் குறைந்தால் கூட  மருத்துவர் படிக்க இடம் கிடிக்காமல் வாழ்கையே மாறி விடும் .மிகவும் கவனமாகப் படியுங்கள்." என்று அறிவுரை கூறி பாராட்டினார் . பயிற்றுவித்த  ஆசிரியர்களுக்கும்  பொன்னாடைப் போர்த்தி பாராட்டப் பட்டனர் .

திரு ப . சின்ன முருகன் ,திரு ரெ.கார்த்திகேயன் ,  திருமதி அமுது ரசினி, திருமதி கவிக்குயில் இரா .கணேசன் ,திருமதி .மோகனக் கண்ணன் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர்களும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.தாய் தனிப் பயிற்சி நிலைய முதல்வர் திரு .மோகனக் கண்ணன்  நன்றி  கூறினார் 

புகைப்படங்கள் இனிய நண்பர் , புகைப்படக் கலைஞர்  ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்
.


கருத்துகள்