தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே ! கவிஞர் இரா .இரவி !

தனித்தியங்கும்    தமிழ்மொழிக்குத்   தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே ! கவிஞர் இரா .இரவி !

வடமொழி எழுத்துக்கள் என்றும் வேண்டாம் !
வளமான உலகின் முதல் மொழி தமிழுக்கு !

நடக்க முடியாதவருக்கு  ஊன்றுகோல் தேவை !
ஓட முடிந்தவருக்கு ஊன்றுகோல் தேவையன்று !


.தனித்தியங்கும்    தமிழ்மொழிக்குத் தமிழ் எழுத்து போதும் !
தன்னிகரில்லா மொழிக்கு பிறமொழி எழுத்து  வேண்டாம் !

பொருளில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் !
தமிழில் கலப்படம் தமிழுக்குக் கேடு தரும் !

ரோஜா என்று எழுதவதை நிறுத்துங்கள் !
ரோசா என்று எழுதிப் பழகுங்கள் !

இராஜா  என்று எழுதவதை நிறுத்துங்கள் !
இராசா  என்று எழுதிப் பழகுங்கள் !

ரமேஷ்  என்று எழுதவதை நிறுத்துங்கள் !
ரமேசு என்று எழுதிப் பழகுங்கள் !

எழுத்துக்குப் பற்றாக்குறை தமிழில் இல்லை !
ஏன் கையை ஏந்த வேண்டும் வடமொழியில் !

இல்லாதவன்தான்  பிட்சை எடுத்து வாழ்வான் !
இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் !

வளமான எழுத்துக்களின் களஞ்சியம் தமிழ் !
வடமொழி எழுத்துக்களை கலப்பவரை இகழ் !

திட்டமிட்டு எழுத்துக் கலப்பை செய்கின்றனர் !
தடுத்திட திட்டம் வகுத்துத் தடுத்திடுவோம் !

அனைத்து மொழிகளின் தாய் நம் தமிழ்மொழி !
அனைவரும் தமிழ்மொழி காக்க அணி வகுப்போம் !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்