பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! வரம் ! கவிஞர் இரா .இரவி !

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !

வரம் !       கவிஞர் இரா .இரவி !

வரம் என்று 
வாங்கியவை 
சாபங்களாகி விடுகின்றன !

தவம் இருந்து 
பெற்றதாகச் சொன்னார்கள் !
வரம் !

தவமின்றியும் 
சிலருக்கு கிடைத்து  விடுகின்றன !
வரம் !

பெற்ற  வரத்தின் 
மதிப்பு அறியாமல் 
சாபமாக்கி விடுகின்றனர் !

.
எழுதும் பேச்சும் 
சிலருக்கு வரமாகின்றது !
சிலருக்கு  சாபமாகின்றது !

கடவுள்கள் தருவதில்லை 
பக்தர்களே எடுத்துக் கொள்கின்றனர் !
வரம் !

உழைப்பால் உயர்ந்தவரை 
வரத்தால் உயர்ந்தான் 
என்பார்கள் !

சாதனை புரிந்தவர்களை 
வரத்தால் வசமானது 
என்பார்கள் !

கடவுள் நம்பிக்கை இல்லை 
எனவே 
வரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை !

உழைப்பு ! உழைப்பு ! உழைப்பு !
உயர்ந்த  வரம் உழைப்பு !
வேண்டும் நினைப்பு !

கருத்துகள்