மனதைத் துணிவால் தூக்கி நிறுத்து ! கவிஞர் இரா .இரவி !

மனதைத் துணிவால் தூக்கி நிறுத்து !  கவிஞர் இரா .இரவி !

முயன்றால் முடியாதது  எதுவுமில்லை உலகில் !
முயன்று தோற்றாலும் கவலை வேண்டாம் மனதில்!

எறும்பு  ஊரக் கல்லும் தேயும் என்பது உண்மை !
என்னால் முடியும் என்று முயல விளையும் நன்மை !

தாழ்வு மனப்பான்மை சாதனைக்குப் பகைமை !
தன்னம்பிக்கை மனப்பான்மை சாதனைக்குத் தோழமை !

சோம்பி இருந்தால் சோதனைகள் வரும் !
விரும்பிச் செய்தால் வெற்றிகள் குவியும் !

நேரத்தை விரயமாக்காமல் பயன்படுத்த வேண்டும் !
நேர நிர்வாகம் என்றும் கடைபிடிக்க  வேண்டும் !

உழைப்பதற்கு   ஒருபோதும் தயங்க  வேண்டாம் !
உழைப்பிற்கான பலன் உறுதியாக வந்துவிடும் !

விதைத்தால்தான் விளைச்சல் வரும் நிலத்தில் !
உழைத்தால்தான் உயர்வு வரும் வாழ்க்கையில் !

உடனே கிடைத்திட வாழ்க்கை திரைப்படமன்று !
ஒவ்வொன்றாய் கிடைக்கும் முயல்வது நன்று !

சிறு தோல்விக்கு சிதைவது என்றும்  நன்றன்று !
பேரு வெற்றிக்கு தோல்வியும் பயற்சியன்றோ !

திட்டமிட்டு செயல்பாட்டால் வாழ்க்கை சிறக்கும் !
திசைகள் தோறும்  உனக்கு  வாசல் திறக்கும் ! 

மனதின் பயத்தை உடன் அப்புறப்படுத்து !
மனதைத் துணிவால் தூக்கி நிறுத்து !  

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்