ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு )      கவிஞர் இரா .இரவி ! 


வண்ணம் மாறவில்லை 
தீயிலிட்டபோதும்
வெண்சங்கு !
 
ஒளி தந்தது 
உருகியபோதும் 
மெழுகு !

வாசம் தந்தது  
தேய்ந்தபோதும்  
சந்தனம் !

சீட்டு எடுத்தது 
சிறையிட்டபோதும் 
சோதிடக்கிளி !

இறந்த கன்று  
முன் வைத்தபோதும் 
பால் தரும் பசு !

அக்கரை  சேர்த்தது 
தண்ணீரில் மிதந்தபோதும் 
படகு ! 

மதுவிற்ற தனியாரிடம் கல்வி 
கல்வி கற்பித்த அரசிடம் மது 
துன்பத்தில்  மக்கள் !

எட்டாக் கனியானது 
ஏழைகளுக்கு 
உயர்கல்வி !
 
உண்ணும் உணவு 
கேள்விக்குறியானது  
உலகமயம் !

வழக்கொழிந்தன 
கதக்களியும் 
கம்பங்களியும் !

பயன்படுத்தாததால் 
ஏர்கலப்பையில்   
கரையான்கள் !

தாகமும் தணிக்கும் 
உயிரையும் எடுக்கும் 
தண்ணீர் !
.
இயற்கையன்று செயற்கையென்று 
மின்வாரியம் அறிவிப்பு 
மகரஜோதி !

கடந்தகாலம் மற 
எதிர்காலம் நினை 
நிகழ்காலம் வாழ் !

கருத்துகள்