முனைவர் ஆ .மணிவண்ணன் ,M.A.,M.L.,PH.D., காவல் உதவி ஆணையர் , மதுரை .


முனைவர் ஆ .மணிவண்ணன் ,M.A.,M.L.,PH.D.,

காவல் உதவி ஆணையர் , மதுரை .

அலைபேசி 91 94432 08519.

 "ஆதி இல்லம் "
மனை என் 1 மற்றும் 2 லயன் சிட்டி ,
திருநகர் ,மதுரை..625006.
மின் அஞ்சல் a.m.lastcitizen@gmail.com


ஆயிரம் ஹைக்கூ நூல் படித்து விட்டு வடித்த கவிதை .

ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா .ரவி .

ஆசை ஆசை 
அவ்வளவு ஆசை 
அருந்தமிழை வளர்க்க ...

பொருளாதாரம் கைவிட்டது 
தமிழுக்கு ரவி என்ற  
புலவனைச் சேர்க்க ..

படித்தது கொஞ்சம் ,
கேட்டது அளவாய் ,
ஆக்கியது ஏராளம் .

காட்டிக் கொள்வது கொஞ்சம் 
வெளியிட்டால் எரிமலை 
மனதுக்குள் ஆசை .

காதலித்தது 
பெண்ணுருவமல்ல 
பெண்ணுரிமை .

செலுத்துவது 
மண்ணுக்கும் மொழிக்கும் 
முதல் மரியாதை .

கொஞ்சம் சொற்கள் 
ஆழமான கருத்துக்கள் 
நிறைந்த வளம் .

சம்பளத்திற்கு அரசு ஊழியர் 
சமூகத்திற்கு மருத்துவர் 
தமிழுக்கு பல்கலைவேந்தர் .

அமைதி நடவடிக்கை 
எண்ணம் எழுத்து 
போர்குணம் .

அள்ள  அள்ள  
குறையாத  அருந்தமிழ் 
அட்சயப்பாத்திரம் .

தலைசெருக்கில்லாத 
தமிழன் 
தழும்பாத  நிறைகுடம்  .

பிறமொழி கலப்பில்லா 
இக்கவிஞன் 
பாவேந்தர் வாரிசு .

தமிழ் காதலர் 
பகுத்தறிவு விரும்பி 
தமஇளங் களப் போராளி .

கண்டிப்பாய் ஓர்நாள் 
தமிழ் அரியணை ஏற்றும் 
சொதிடமல்ல "  உண்மை " .

என்றும் இவர் புகழ் 
தமிழுலகம் 
பேசும் !பேசும் !


ஆசையுடன் ...ஆ .மணிவண்ணன் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்