தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை !

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை !

புகைப்படங்கள் இனிய நண்பர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை  தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .இராஜராஜன் வரவேற்றார் .செயலர்  கவிஞர் இரா .இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார்  ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை உரையாற்றினார் .

கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,விஸ்வநாதன்   தன்னம்பிக்கை  கவிதை வாதித்தார் . திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,முத்துக்கிருஷ்ணன்  ஜானகி ராமன், சம்பத் குமார்,திரு ஹுசைன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

.தன்னம்பிக்கை பயிற்சியாளர்   பேராசிரியர் எட்வின் ராஜகுமார்  'நம்மால் முடியும் ' என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் . சில்லரைகளை  கோவில் உண்டியல்களில் போட்டு  விட்டு பேருந்து நடத்துனரிடம் சில்லரை இல்லை என்று சண்டை போடுகிறோம்.விரைவு  உணவு வகைகளை உண்டு விட்டு நோய்கள் வந்து தவிக்கிறோம் ,கவனமாக வாழ்தல் அவசியம் என்று வாழ்வியல்  கருத்துக்களை   கூறி பயிற்சி அளித்தார் .

 ஜெகநேசன் ,கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .பிரேம் ஆனந்த   நன்றி  கூறினார்



கருத்துகள்