மழையும் அவளும் ! கவிஞர் இரா .இரவி !

மழையும் அவளும் !  கவிஞர் இரா .இரவி !



மழை வந்தால் 
மரங்கள் மகிழ்கின்றன !

அவள் வந்தால் 
நான் மகிழ்கிறேன் !

வாடிய பயிர்கள் 
மழையால் துளிர்க்கின்றன !

வாடிய நானும் அவள் 
வருகையால் துளிர்க்கிறேன் !

மழை வந்தால் 
தவளைகள் குதிக்கின்றன ! 

அவள் வந்தால் நானும் 
ஆர்வத்தில் குதிக்கின்றேன் !

மழை விழுந்தால் 
மண்ணில் வாசம் !

அவள் வந்தால் 
என்னில் பாசம் !

உயிர்களுக்கு தேவை 
உன்னத மழை !

எனக்கு தேவை 
ஒப்பற்ற அவள் !

.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்