நினைவுகள் மட்டும் அழிவதில்லை ! கவிஞர் இரா .இரவி !

நினைவுகள் மட்டும் அழிவதில்லை  !  கவிஞர் இரா .இரவி !

கடவுள் உண்டு இல்லை என்று 
தர்க்கத்தில் தொடங்கியது !

கடவுளை ஒதுக்கி வைத்து விட்டு 
காதல் மலர்ந்தது அன்று !

எனக்கு என்ன பிடிக்கும் 
என்று நீ கேட்க !

உனக்கு என்ன பிடிக்கும் 
என்று  நான் கேட்க !

எனக்கு பிடித்தவற்றில் 
மிகவும் பிடித்தது நீ என்றேன் !

அதே கேள்வி உன்னைக் கேட்டதும் 
நீயும் அதனை  வழிமொழிந்தாய் !

விதியின் மீது நம்பிக்கையற்றவன் நான் 
விதி விளையாடியது பிரித்தது !

உலகின் எங்கோ ஒரு மூலையில் நீ  
உலகின் மற்றொரு மூலையில் நான் !

நினைவுகள் மட்டும் அழிவதில்லை 
கடல் அலைகள் என வந்து மோதுகின்றன !

.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்